districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: பாலூட்டும் அறை திறப்பு

உதகை, அக்.13- தீக்கதிர் நாளிதழில் கட்டுரை வெளியான நிலையில், உதகை  மத்திய பேருந்து நிலையத்தில் மூடப்பட்டிருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் வரவேற் றுள்ளனர்.  பாலூட்டும் தாய்மார்கள் பணி மற் றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது, பேருந்து நிலை யங்களில் காத்திருக்க வேண்டியுள் ளது. அப்போது தங்கள் குழந்தை களுக்கு எவ்வித இடையூறுமின்றி பாலூட்டும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டு இயங்கி வந்தது. அதன்படி உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட் டும் அறையில் இருக்கைகள், மின் விசிறி போன்ற வசதிகள் செய்யப் பட்டு இருந்தது. ஆரம்பத்தில் தாய் மார்கள் பலர் பயன்படுத்தி வந்த னர்.  இதற்கிடையே அந்த அறை பெரும்பாலான நேரங்களில் பூட்டப் பட்டு இருந்தது. இதனால் அறையை திறக்குமாறு யாரிடம் கேட்பது என தெரியாமல் கிராமப்புற பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் வந்த  பெண்கள் தயக்கம் அடைந்தனர்.  மேலும் தாய்மார்கள் கைக்குழந்தை களுடன் தவித்து வந்தனர். இது குறித்து கடந்த அக்.10 ஆம் தேதி யன்று தீக்கதிர் நாளிதழில் கட் டுரை வெளியானது. இதன் எதி ரொலியாக உதகை பேருந்து நிலை யத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை மீண்டும் திறக்கப்பட்டுள் ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், தாய்மார்கள் பாலூட்டும் அறை கண்ணாடிகள் வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே யாரும் இருப்பது தெரியாத வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதை தவ றாக பயன்படுத்த நினைக்கும் சமூக விரோதிகள் சிலர், அந்த அறைக் குள் சென்று மது அருந்துகின்ற னர். அதற்காக தான் அந்த அறையை பூட்ட வேண்டி இருந்தது. தற்போது தாய்மார்களுக்காக அறை திறக்கப்பட்டுள்ளது, என்ற னர்.