திருப்பூர், மார்ச் 19- தீயணைப்பு துறையிடம் உரிமம் பெறாத நிறுவனங்களில்தான் அதிகப்படியான தீ விபத்துகள் நடக்கிறது. கோடை காலங்க ளில் தீ விபத்துகளைத் தவிர்க்க உரிய முன் னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தீயணைப்புத் துறை யினர் தெரிவித்துள்ளனர். கோடை காலம் ஆரம்பித்திருக்கும் நிலை யில் தீ விபத்துகளும் ஆங்காங்கே நடைபெ றுவதாக தகவல்கள் வரத் தொடங்கியுள் ளன. இத்தகைய சூழ்நிலையில் தீ விபத்துகள் எதனால் ஏற்படுகிறது, எப்படி விபத்துகளைத் தவிர்ப்பது என்பது தொடர்பாக திருப்பூர் மாவட்ட தீயணைப்புத் துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
இரு மாதங்களில் 14 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தீய ணைப்பு நிலையங்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி இரு மாதங்களில் 385 மீட்பு அழைப்பு கள் வந்துள்ளன. 260 தீ விபத்துகள் நிகழ்ந் துள்ளன. இதில், 257 விபத்துகள் சிறிய அள விலும், 3 விபத்துகள் நடுத்தர அளவிலும் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி 14 மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 6 நபர் களும், 288 கால்நடைகளும் காப்பாற்றப்பட் டுள்ளது. முறையாக தீயணைப்பு துறையிடம் உரிமம் பெறாத நிறுவனங்களில் தான் அதிகப் படியான தீ விபத்துகள் ஏற்படுகிறது. ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே தீயணைப்பு துறையிடம் உரிமம் பெறுகிறார்கள். மேலும் ஒவ்வொரு நிறுவனத்தில் அங்கு பணிபுரிப வர்களில் 1 சதவீதம் பேர் அப்பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் 3 மாதம் பயிற்சி பெற்று சான்றிதழ்கள் வாங்கியிருக்க வேண் டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் தீயணைப்பு பயிற்சி வழங்காமலே தீ விபத்தை தடுக்கும் சாதனங்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களிடமே பயிற்சி சான்றிதழ் பெறுகிறார்கள். இதனால் போது மான பயிற்சி இல்லாததால் தீயை கட்டுப்ப டுத்தத் தெரிவதில்லை.
கோடை கால ஆபத்து
கோடை காலங்களில், நகரங்களில் காங் கிரீட் கட்டிடங்கள் அதிகமாக உள்ள பெரிய நிறுவனங்களில் வெப்பம் வெளியேற்றம் அதி கரித்து மேக வெடிப்பு ஏற்பட்டு திடீர் மழை பொழிவுக்கும் வாய்ப்புள்ளது. இதனால் இடிதாங்கிகள் இல்லாத நிறுவனங்களில் மின் னல் தாக்குதலால் தீ விபத்து ஏற்படும் அபா யம் உள்ளது. தீயணைப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு தீயணைப்பு துறையினால் அபராதம் விதிக்க முடியாது. வருவாய் துறைக்கு மட்டுமே பரிந்துரைக்க முடியும். இத்தகைய நிலையில் பெரும் நிறுவ னங்கள் தீ விபத்து பாதுகாப்பு விதிமுறை களை பின்பற்றாமல் அலட்சியமாக இருப் பதால் தீ விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன.
பராமரிப்பு அவசியம்
ஒவ்வொரு நிறுவனமும் முறையாக தீய ணைப்பு துறையிடம் உரிமம் பெற்று இருக்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் பெறுவதில்லை. ஆய்விற்கு சென்றால் தனி யார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசியல் தலையீடுகள் வருகிறது. ஒரு நிறுவனத்திற்கு உரிமம் தரவேண்டும் என்றால், முறையாக மின் கம்பிகளை சுவற்றிற்குள் பதித்திருக்க வேண்டும். முறையான பாதுகாப்பு உபகர ணங்கள் வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை மின் இணைப்புகளின் அருகில் வைக்கக்கூடாது. அறை முழுக்க பருத்தி துணி லாட்டுக்களை அடைத்து வைக்க கூடாது, காற்றோட்டமாக இருக்க வேண்டும். தீ விபத்துகள் பெரும்பா லும் மின் கசிவால் ஏற்படுகிறது. மின் வயர் களை முறையாகப் பராமரிக்காததால், கவ னக் குறைவால் இந்த விபத்துகள் ஏற்படு கிறது. இம்மாதிரியான விபத்துகளில் கட்டுமா னங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தீ விபத்தை முன்பே தடுக்க பராமரிப்பு அவசி யம். அதுபோல் தீ விபத்து ஏற்பட்ட பின்பு அதை எப்படித் தடுப்பது, எந்த விதமான தீ விபத்துக்கு, எந்தவிதமான தீ அணைப்பு முறையை உபயோகிக்க வேண்டும் என்ப தைத் தெரிந்து கொள்வது அவசியம். வீடுகள், வாகனங்களிலும் ஏற்படும் பலவிதமான தீ விபத்தைத் தடுக்க, பலவிதமான தீத்தடுக் கும் முறைகள் உள்ளன.
தீ அணைப்பான் கருவிகள்
தீ அணைப்பான் கருவிகளில் பலவகை உள்ளன. ஏபிசி தீ அணைப்பான், வாட்டர் சிஒ2 தீ அணைப்பான், டிசிபி தீ அணைப்பான், ஃபோம் தீ அணைப்பான் போன்று எந்தத் தீ விபத்துக்கு எந்தவிதமான அணைப்பான் பயன்படுத்துவது என்ற முறை உள்ளது. தீ விபத்து ஏற்படும் சமயத்தில், தீயைக் கண்டு பயந்து ஓடுவார்கள் அல்லது பயர் இன்ஜின் தொலைபேசிக்கு தொடர்பு கொள்வார்கள். இதற்குள் தீ காற்றினால் அதி தீவிரமாகப் பரவி உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் இன்னும் இரட்டிப்பாக்கி விடுகிறது. சமையல் எரிவாயு உருளையை எப்படிப் பயமில்லா மல் பயன்படுத்துகிறோமோ, அப்படி தீ அணைப்பானையும் தீ விபத்து ஏற்படும் போது எந்தவிதப் பயமோ, தயக்கமோ இன் றிப் பயன்படுத்த வேண்டும். இதற்கான பயிற் சியை முறைப்படி எடுத்துக் கொண்டால் மிக எளிதாக இதைக் கையாள முடியும்.
காட்டுத் தீ
வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ இயற்கையான முறையில் ஏற்படுவதை விட மனிதர்களால் தான் அதிகம் ஏற்படுகிறது. காட்டுத் தீ உருவானால் பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவும். இவை காடுகளில் வாழும் உயிரினங்களை அழிப்பது மட்டு மல்லாமல் காடுகளின் வளத்தையே அழிக்கி றது. வனப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட் களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். தீ விபத்துகளை அணைக்கச் செல்லும் வாக னங்களுக்கு போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வழி ஏற்படுத் தித் தருவதன் மூலம் விரைவில் விபத்து ஏற் பட்ட இடத்திற்கு செல்ல முடியும், ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும் என்று கூறி னார். (ந.நி.)