ஈரோடு, ஜூலை 20- ஈரோடு வட்டத்தில் நடைபெற்ற உங் களைத் தேடி உங்கள் ஊரில் முகாமில் ரேசன் பொருட்கள் முழுமையாக வழங் குவதை உத்தரவாதப்படுத்த வேண் டும், 100 நாள் வேலை திட்டம் முறை யாக வழங்க வேண்டும், ஈரோடு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் வியாழனன்று காலை 9 மணி முதல் வெள்ளியன்று காலை 9 மணி வரை முகாம் நடைபெற் றது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார்.மேலும் முகாமில் ரேசன் பொருட் கள் முழுமையாக வழங்குவதை உத்தர வாப்படுத்த வேண்டும் என மாதர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப் பட்டது. இதில், மாநகராட்சி ஆணையாளர், பொது மேலாளர் (ஆவின்), இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத் துறை) உட்பட அரசு அலுவலர்களும் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் கால் நடை மருத்துவமனை, அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், துவக் கப்பள்ளிகள், நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பா.லலிதா அளித்த மனுவில், கூரபாளையம் ரேசன் கடையில் மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை வழங்குவதில்லை. ஒவ்வொரு பொரு ளுக்கும் ஒருமுறை செல்ல வேண்டி யுள்ளது. அனைத்துப் பொருட்களை யும் ஒரே நாளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித் தார். இதேபோன்று நசியனூரைச் சேர்ந்த கலாமணி என்பவர் கொடுத்த மனுவில், ஊரக வேலை உறுதி திட்டப் படி 100 நாள் வேலை முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஆண்டுக்கு 4 முதல் 10 நாட்கள் வரை மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, ஜாப் கார்டு எனப்படும் வேலைக்கான அடையாள அட்டை வைத்திருப்போ ருக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு அளிப்பதை உத்தரவாதப்ப டுத்த வேண்டும் என மனு அளித்தார். இதுபோன்று ஏராளமானோர் மனுக் களை அளித்தனர். உதகை இதேபோன்று உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தூனேரி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. இதில், கோட் டாட்சியர் மகாராஜ் தலைமையில், உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன், தூனேரி ஊராட்சித் தலைவர் வி. உமாவதி, சிறப்பு வட்டாட்சியர் சங்கீதா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சோம சுந்தரம் செயலாளர் கார்த்திக் ஆகி யோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். ‘இந்த முகாமில் 15 துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த முகா மில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மனுக் களை வழங்கியுள்ளனர். பெரும்பா லான மக்கள் மகளிர் உரிமை தொகை கோரியும், வீட்டு மனை கோரியும் மனு அளித்துள்ளனர். மனுக்கள் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளின் பரிசீல னைக்கு அனுப்படும். மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.