சேலம், ஜூலை 29- அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் காலியாக உள்ள பணியி டங்களை நிரப்பிட வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலு வலர் சங்கத்தினர் சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண் டும். எம்எஸ்டிஇ அறிவித்துள்ளபடி சான்றிதழ்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். அனைத்து நிலை தொழில்நுட்ப பணியாளர் களின் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிர போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. முன்னதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மொ.ஞானத்தம்பி போராட்டத்தை துவக்கி வைத்தார். இதில், அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் என்.திரு நாவுக்கரசு மற்றும் சகோதர சங்கங் களின் நிர்வாகிகள் இரா.சுப்பிர மணியன், ஸ்ரீபதி உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில் சேலம் கிளை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார். இதில் தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் திர ளாக கலந்து கொண்டனர்.
கோவை
இதோபோல் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங் கத்தின் கோவை மண்டல அளவி லான ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் கோவை, டாடாபாத் சிவானந்த காலனி சாலையில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சி பணியாளர் சங்க நிர்வாகி எஸ்.எம்.வேலுமணி துவக்கி வைத்தார். தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் பி.நட ராஜன் கோரிக்கை விளக்கி உரை யாற்றினார். இதில், டிஎன்ஆர்ஓ மாநிலச் செயலாளர் பி.செந்தில் குமார், பெபி பொதுச்செயலாளர் ஆர்.மகேஸ்வரன், டிஎன்ஜிஇஏ மாவட்டத் தலைவர் ஏ. ஜெகநாதன், பிஎஸ்என்எல்யு மாவட்டச் செய லாளர் எஸ்.மகேஸ்வரன் உள்ளிட் டோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் கே. மனோகரன் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். முடி வில், கே.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.