districts

img

காங்கேயம் ஆணையாளரின் பாலியல் சீண்டலுக்கு எதிராக போராடிய பெண் ஊழியர்கள் புத்தாண்டு நாளில் பணியில் சேர்ந்தனர்

திருப்பூர், ஜன.2- காங்கேயம் நகராட்சி ஆணை யாளரின் பாலியல் சீண்டலில் சிக்கி,  அதற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்ற ஒப்பந்தப் பெண் பணியாளர் கள் புத்தாண்டு தினத்தில் பணியில் சேர்ந்தனர். காங்கேயம் நகராட்சி ஆணை யாளராக இருந்தவர் முத்துக்கு மார். இவர் கடந்த சில மாதங்களுக்கு  ஆணையராக இங்கு பொறுப் பேற்ற நிலையில் ஒப்பந்த அடிப்ப டையில் வேலை செய்யக்கூடிய, கொசுப்புழு ஒழிப்பு பெண் பணியா ளர்களிடம் அதிகாரத்தைப் பயன்ப டுத்தி வீட்டுக்கு வரவழைத்து பாலி யல் சீண்டல் நடவடிக்கைகளில் ஈடு பட்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் சிஐடியு சங்கத் தில் முறையிட்டனர். ஆனால் நக ராட்சி ஆணையர் தனது தவறை மூடி மறைக்கும் விதத்தில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி சிஐடியு சார்பில் மாநில அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்  ஆகியோரிடம் மனு அளிக்கப்பட் டது. புகாரின் அடிப்படையில் இப்பி ரச்சனையில் விசாரணை நடத்தவும் ஆட்சியர் உத்தரவிட்டார். சமூக நலத்துறை அலுவலர் மூலம் விசார ணையும் நடத்தப்பட்டது. எனினும்  குறிப்பிட்ட காலத்தில் இந்த சம்பவத் தில் நடவடிக்கை இல்லாததால் சிஐ டியு உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு மூலம் ஆர்ப்பாட் டம், காத்திருப்புப் போராட்டம் நடத் தப்பட்டன. சிஐடியு சங்கத்தின் மூலம் நகராட்சிகள் நிர்வாக இயக்கு நர் உள்பட உயர் அதிகாரிகள் கவ னத்துக்கும் இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டு நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. சிஐடியு தலைமையில் பெண்  பணியாளர்களின் தொடர் போராட் டம், விடாப்பிடியான முயற்சியின் பலனாக நகராட்சி ஆணையர் முத் துக்குமார் இங்கிருந்து திருத்து றைப் பூண்டி நகராட்சிக்கு மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டார். அதே சமயம் கொசுப்புழு ஒழிப்புப் பணி யாளர்களுக்கு வேலை வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில் சிஐடியு மூலம் மாநில  அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் இப் பெண்களுக்கு வேலை வழங்க வலி யுறுத்தி தொடர் முயற்சி மேற் கொண்டது.

மூன்றரை மாதங்களாக  தொடர்ந்துப் போராடி வந்த நிலை யில் இப்பெண் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவும் நக ராட்சிகள் நிர்வாக இயக்குநர் உத்தர விட்டார்.  இதையடுத்து காங்கேயம் நக ராட்சி அலுவலகத்தில் புத்தாண்டு தினமான சனியன்று இந்த பெண் ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்ந்தனர். பாலியல் சீண்டலில் ஈடு பட்ட நகராட்சி ஆணையரை பணி  மாறுதல் செய்ய வைத்து, விசார ணைக்கும் உத்தரவிடச் செய்தது டன், மீண்டும் வேலையும் பெற்ற நிலையில் பெண் பணியாளர்கள் சனிக்கிழமை காங்கேயத்தில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.  இந்த எளிய பெண் உழைப்பாளி களின் நியாயத்திற்காக நடவ டிக்கை எடுத்த அமைச்சர்கள், நக ராட்சிகளின் நிர்வாக இயக்குநர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தற்போ தைய காங்கேயம் நகராட்சி ஆணை யாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அத் தோடு அநீதிக்கும், அதிகார அத்து மீறலுக்கும் எதிராக துணிவுடனும், உறுதியுடனும் போராடிய பெண்  பணியாளர்களுக்கும், அவர்க ளுக்கு தோளோடு தோள் நின்ற நியா யத்திற்காக போராடிய மற்ற பெண் பணியாளர்களுக்கும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருக்கும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிப்பதாகவும் சிஐ டியு திருப்பூர் மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் கூறியுள்ளார்.