தருமபுரி, மார்ச் 5- பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் ஞாயிறன்று பல்வேறு மாவட் டங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழைய பென்சன் திட்டத்தை உடன டியாக அமல்படுத்த வேண்டும். முடக் கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் ஆகி யவற்றை விடுவிக்க வேண்டும். இடை நிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி யில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்து ணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வரு வாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 115, 139 மற்றும் 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயி றன்று ஜாக்டோ – ஜியோ சார்பில் உண் ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தருமபுரியில் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சுருளி நாதன், பி.எம்.கெளரன், இராச.ஆனந் தன், கே.பாஸ்கரன், சாமிநாதன் ஆகி யோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி. காவேரி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழனி யம்மாள் போராட்டத்தை துவக்கி வைத்து, உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா, ஏஐடி யுசி மாவட்ட செயலாளர் பி.மணி, இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் பி.கிருஷ்ணன், ஓய்வுபெற்றோர் கூட் டமைப்பின் மாவட்ட செயலாளர் எம். பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இதில், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணா குபேரன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பி. சங்கர், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.நிர்மல், தமிழ்நாடு ஆசி ரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலா ளர் பொன்.தமிழ்மணி, உயர்நிலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் துரைராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் எஸ்.கேசவன், முதுநிலை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி நன்றி கூறினார்.
ஈரோடு
ஈரோடு, காளை மாடு சிலை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட் டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கி ணைப்பாளர்கள் ச.விஜயமனோகரன், பி.எஸ்.வீரகார்த்திக், மு.சண்முகம், பி. சரவணன், அ.ஆறுமுகம், எம்.ஆர்.ரஜிக் குமார் ஆகியோர் தலைமை ஏற்றனர். அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பி னர் மு.சீனிவாசன் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால் ராஜ் நிறைவுரையாற்றினார்.
கோவை
கோவை, சிவானந்தா காலனியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத் திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ப.செந்தில்குமார் தலைமை ஏற்றார். மாநில தணிக்கையா ளர் த.அருளானந்தம் வரவேற்றார். தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் த.வீரமணி தொடக்க வுரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலக சங்கத் தின் தலைவர் கு.வெங்கடேசன் உரை யாற்றினார். இதில், மாவட்ட தலைவர் ச. ஜெகநாதன், டிஇஎஸ்டிஎப் மாவட்ட செயலாளர் சி.அரசு, டிஎகே மாவட்ட ஒருங்கினைப்பாளர் வெ.சம்பத்குமார், டிஎன்பிஜிடிஏ மாவட்ட செயலாளர் த. ஆனந்த், டிஎன்ஜிஇயு மாநில துணைத் தலைவர் கா.பாலசுப்ரமணியன், மாவட்ட தலைவர் கலைவாணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணியின் மாவட்ட தலைவர் வி.மணி கண்டன் நன்றி கூறினார்.