districts

img

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை சிபிசிஐடி விசாரணை கேட்டு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஏப்.25- நாமக்கல் அருகே இளம்பெண்ணை பாலி யல் வன்கொடுமைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு விவ சாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.   நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட் டம், ஜேடர்பாளையம் அருகில் உள்ள கரப் பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று அருகிலுள்ள கிரா மத்தில் ஆடு மேய்த்துக்  கொண்டிருந்தார்.  அப்போது அவர் அடையாளம் தெரியாத நபர் களால் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம் பவம் நாமக்கல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள கரும்பு வெட்டும் வேலைக்கு வந்த கரூரை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப் பட்டு, நடத்திய விசாரணையில், திட்டமிட்டு பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து  கொன்றதும், பின்னர் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றதாக சிறுவன் கைது செய் யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ணின் குடும்பத்தார், ஒரு சிறுவன் இவ்வளவு பெரிய செயலை செய்திருக்க முடியாது. எனவே, போலீசார் உண்மை குற்றவாளி களை மறைக்கின்றனர் என கூறி எதிர்ப்பு தெரி வித்து பல்வேறு போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பாலி யல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்து  உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஜேடர்பாளையத் தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் தலைமை  ஏற்றார். இதில் கே.தங்கமணி, பரமத்தி வேலூர் தாலுகா செயலாளர் சண்முகம், பள்ளிபாளை யம் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து, நூற்றுக்கும் மேற் பட்ட போலீசாரை குவித்த நிலையிலும், தடையை மீறி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.