கோவை, செப்.2- அன்னூரில் சிப்காட் அமைக் கப்பட உள்ளதாக தெரிவித்து, 3 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பத்திர பதிவு செய்ய தடை விதிப்பதாக குற்றம்சாட்டி அன்னூர் சார் பதிவாளர் அலுவ லகத்தை விவசாயிகள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் உள்ள வடக்கலூர், குப்பனூர், அக்கரை செங்கப் பள்ளி, பொகலூர் மற்றும் மேட்டுப் பாளையம் வட்டத்தில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்க ளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமி டப்பட்டது. இந்த நிலங்களை கைய கப்படுத்த பணிகளை துவக்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அந்த சிப்காட் அமைக்கும் முயற்சி கைவி டப்பட்டது. இந்த நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தேர்வு செய்யப்பட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகள் விற்பனை செய்ய பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதன் காரண மாக அந்த பகுதி விவசாயிகள் தங்களை நிலங்களை விற்பனை செய்ய முடியாமலும் வாங்கவும் முடியாமலும் சிரமப்பட்டு வருகின் றனர். மேலும் இது குறித்து அதிகாரிக ளிடம் பல முறை கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் கொடுக்க வில்லை. அதிகாரிகளை கண்டித்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும், எங்கள் நிலத்தை விற்கவும் வாங்கவும் தடை விதிக்க நீங்கள் யார் என கேட்டு அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விவ சாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் சார்பதிவா ளர் அலுவலகத்தில் பாதுகாப்பிற் காக குவித்தனர். உயர் அதிகாரிகள் வந்து தங்களுக்கு பதில் அளிக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். விவசா யிகளின் இந்த போராட்டம் காரண மாக தினசரி அன்னூர் பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெறும் பத்திரப்பதிவு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.