சேலம், டிச.7- குத்தகை விவசாயிகளை வெளியேற்ற துடிக்கும் ஒமலூர் வட்டாட்சியரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூர் வேலாசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்த மான நிலத்தில் குத்தகை விவசாயிகள் பல்லாண்டுகளாக சாகுபடி செய்து வரு கின்றனர். இந்நிலையில், அந்நிலங்களை பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர் ஒரு வர் சட்டவிரோதமாக 2006ல் ரியல் எஸ்டேட் செய்து வரும் நபர் ஒருவருக்குக் கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதை எதிர்த்து கடந்த 2006 ஆண்டு முதல் குத்தகை விவசா யிகள் நீதிமன்றம் மூலமும், எதிர்ப்பு இயக் கங்களை நடத்தியும் போராடி வருகிறார் கள். சட்டவிரோத கிரையம் பெற்ற ரியல் எஸ்டேட் செய்து வரும் நபர் விவசாயிகளை வெளியேற்றம் செய்திட தொடுத்த வழக்கு கடந்த 8.11.2021ல் சென்னை உயர்நீதி மன்றம் முடித்து வைத்துவிட்டது. அதோடு விவசாயிகள் தங்கள் உரிமையை நிலைநாட்டிட மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறி உள்ளது. ஆனால், அதற்கான அவகாசம் தராமல் ஓமலூர் வட்டாட்சியர், விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். இதை கண்டித்து ஓம லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டத்தலை வர் பி. அரியாக்கவுண்டர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, மாவட்ட துணைச்செயலாளர் ஜி.மணிமுத்து ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மேலும், தாலூகா செயலாளர் ஏ.அர்த்தனாரி, நிர் வாகிகள் எம்.மோகன், நடராஜன், கருப்பண்ணன், தங்கராஜ், பொன்னு சாமி, மற்றும் கிருஷ்ணன், சுப்ரமணி, ரகுபதி, வைத்தியகவுண்டர், முத்துசாமி சீனி வாசன் உள்ளிட்டு ஏராளமான குத்தகை விவ சாயிகள் கலந்து கொண்டனர்.