கோவை, டிச. 1- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளம றிவியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள கலந் தாய்வு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் இள மறிவியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக நவ.26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், நிவர் புயலின் தாக்கத்தினாலும், தற்போதுள்ள பருவ நிலையை கருத்தில் கொண்டும் செவ்வாயன்று (டிச.1) முடிய இருந்த இணையதள வழி கலந்தாய்வு டிச.3 ஆம் தேதி (வியாழனன்று) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவ, மாணவியர்கள் தங்களது விருப்பப்பாடம் மற்றும் கல்லூரித் தேர்வில் மீண்டும் மாற்றம் செய்ய விரும்பினால், இந்த கால நீட்டிப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இணையதள வழி கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களது விருப்பப்பாடம் மற்றும் கல்லூரித் தேர்வினை உறுதி செய்த மாணவர்கள் மீண்டும் அவர்களின் விருப்பத் தேர்வினை மாற்றியமைக்கலாம் என்று கல்லூரி முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் முனைவர் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.