திருப்பூர், மார்ச் 20 – தமிழக அரசு பட்ஜெட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கம் வரவேற்றுள்ளது. அதே சமயம் இத்திட்டத்தில் திருப்பூரையும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திங்களன்று தாக்கல் செய்த பட் ஜெட் அறிக்கையை வரவேற்று ஏற்றுமதியா ளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா வது: ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கர் பரப் பளவில் சேலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா அமைப்பதை வரவேற்கிறோம். புதிய தலை முறை தொழில் முனைவோர் நீட்ஸ் திட்டத் தில் தொழில் தொடங்குவதற்கு ரூ.144 கோடி மானியம் வழங்கும் அறிவிப்பு வரவேற்கத் தக்கது. இது திருப்பூரில் ஆயத்தஆடை தொழிற்சாலை தொடங்க ஊக்குவித்து, ஈர்க் கும். 711 தொழிற்சாலைகளில் 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத் துவம் திட்டத்தை விரிவுபடுத்துவதை வர வேற்கிறோம். தொழிலக திறன் மேம்பாட்டு பள்ளிக்கு ரூ.25 கோடி ஒதுக்குவது வர வேற்கத்தக்கது. எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது வரவேற்கத்தக் கது. எனினும் இத்திட்டத்தில் திருப்பூரையும் இணைக்க வேண்டும். 2030ஆம் ஆண்டுவாக்கில் 50 சதவிகிதம் மின்சாரத்தை மரபுசாரா எரிசக்தி ஆதாரத்தில் இருந்து உற்பத்தி செய்வதற்கு சிறப்பு நிறு வனம் உருவாக்குவதாக கூறியிருப்பது வர வேற்கத்தக்கது. 2030க்குள் அரசு தனியார் கூட்டுத் திட்டத்தின் மூலம் 15 புதிய நீர்மின் திட் டங்களில் 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்வது மின் தேவையை பூர்த்தி செய்வதுடன், இடையூறில்லாத மின் விநியோகத்திற்கும் உதவியாக இருக்கும். முக்கிய மாநகராட்சிகளில் பொது இடங்க ளில் இலவச அருகலை (வை-பை) வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அரசு அறிவித் துள்ள நிலையில், திருப்பூர் மாநகராட்சியை யும் அதில் இணைக்க வேண்டும். ஏற்றுமதியு டன் தொடர்புடைய தொழிற்சாலைகள் நிரம் பியிருப்பதால் இந்த அருகலை சேவை உதவி யாக இருக்கும்.இவ்வாறு கே.எம்.சுப்பிரம ணியம் கூறியிருக்கிறார்.
சைமா வரவேற்பு:
தமிழ்நாட்டின் பொதுவான வளர்ச்சிக் கான திட்டங்கள் என்பதால் நிதிநிலை அறிக் கையை வரவேற்பதாக தென்னிந்திய பனி யன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) கூறியுள் ளது. சைமா சங்கத் தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ் வரன் திங்களன்று விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: இந்த நிதிநிலை அறிக்கையில் தொழில் மேம்பாட்டிற்கான தமிழக அரசின் அக்கறையும், ஈடுபாடும் தெரிகிறது. தொழிற்பயிற்சி மேம்பாட்டிற் கான திட்டம் வரவேற்கத்தக்கது. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு மின்சார யூனிட் மானியம் அதிகமாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு விசேச அறிவிப்புகள் (வரி நிலு வைக்கான சமாதான் திட்டம் – தொழிலாளர் குடியிருப்பு வசதி) இன்றைய அறிவிப்புக ளில் காணப்படவில்லை. தமிழ்நாட்டின் பொதுவான வளர்ச்சிக்கான திட்டங்கள் என்ப தால் வரவேற்பதாக அவர் கூறியிருக்கிறார்
ரைசிங் சங்கம் வரவேற்பு
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பட் ஜெட் மூலம் திருப்பூரை தேடி வரும் வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக திருப்பூர் ரைசிங் உரி மையாளர் சங்க தலைவர் கருணாம்பிகா ராம சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு மூலம் நகர்ப்புற வளர்ச்சி ரூ.38,444 கோடி, ஊரக வளர்ச்சி ரூ.22,562 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரி கிறது. இதன் மூலம் நகர உள்கட்டமைப்பு வச திகள் மேம்படும் என்று நம்பலாம். வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழி லாளர்கள் திருப்பூருக்கு வரும்பொழுது அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடியி ருப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நெடுஞ்சாலை துறைக்காக ரூ.19,465 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் போக்குவ ரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டு சரக்கு வாக னங்கள் விரைவில் துறைமுகத்தை சென்ற டையும் வகையில் நிலைமை மேம்படும் என்று தொழில் துறையினரால் எதிர்பார்க்கப்ப டுகிறது. எரிசக்தி துறைக்காக ரூ.10,694 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால், ‘பைப்லைன் கேஸ்’ திட்டம் மூலமாக தொழிற்சாலைகளுக்கு மானிய விலையில் எரிசக்தி வழங்குவதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.