districts

img

எருமப்பட்டி ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்!

நாமக்கல், ஜன.18- எருமப்பட்டி அருகே நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளை பிடித்த  வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி ஊராட்சி ஒன்றியம், பொன் னேரி கிராமத்தில் சனியன்று, பொங் கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்றது. இதனை மாநிலங்களவை உறுப் பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத் தார். முன்னதாக, மாடுபிடி வீரர்கள்  ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இப்போட்டியில் சுமார் 560 காளைகள் மற்றும் 250  மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட னர். போட்டியையொட்டி, 5 மருத்து வக்குழுக்கள், 25 மருத்துவர்கள் மற் றும் பணியாளர்கள், 3 அவசர சிகிச்சை ஊர்திகள், 3 நடமாடும் சிகிச்சை ஊர்திகள், காவல் துறை  சார்பில் 2 கூடுதல் காவல் கண் காணிப்பாளர்கள், 5 துணை காவல்  கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள் உட்பட 377 காவல் துறையினர், கால்நடை பராமரிப் புத்துறை சார்பில் 2 அவசர சிகிச்சை  ஊர்திகள் மற்றும் 80 நபர்கள் அடங் கிய 7 மருத்துவக்குழுவினர் பணி யில் ஈடுப்படுத்தப்பட்டனர். வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் பிடித்து, பரிசு களை அள்ளிச்சென்றனர். இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ச. உமா, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன், எருமப்பட்டி பேரூராட்சித் தலைவர் பழனி யாண்டி, வருவாய் கோட்டாட்சியர்  ரா.பார்த்தீபன், கால்நடை பரா மரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் வீ.பழனிவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மா. சண்முகம், ஆகாஷ் ஜோஷி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.