districts

img

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி 71.42 சதவிகித வாக்குப் பதிவு

ஈரோடு, ஏப். 19- ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவானது. குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய தொகுதிகள் அடங் கியது ஈரோடு நாடாளுமன்ற தொகுதி. இதில்  7 லட்சத்து 44 ஆயிரத்து 927 ஆண் வாக்கா ளர்களும், 7 லட்சத்து 93 ஆயிரத்து 667  பெண் வாக்காளர்களும் மற்றும் 184 மூன் றாம் ஆம் பாலினத்தவர் என 15 லட்சத்து 38  ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1688 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டிருந்தன.  இதனை அடுத்து காலை 7 மணிக்கு  வாக்குப் பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத் துடன் வாக்களித்தனர். இந்நிலையில் ஒரு  மணி நிலவரப்படி 43.54 விழுக்காடு வாக்குக ளும், 3 மணியளவில் 55 மற்றும் 5 மணியள வில் அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு 65.13 ஆகும். வரிசையில் காத்திருக்கும் வாக்காளர் களுக்கு வெயில் காரணமாக வாக்குச்சா வடிகளில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சாய்வுதளம் வசதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பழுதான பேலட் யூனிட் 2, கன்ட்ரோல் யூனிட் ஒன்று மற்றும் விவிபேட் இயந்திரங்கள் 4 பழுதாகி மாற்றப்பட்டன. அதேபோல ஈரோடு மேற்கு தொகுதியில் 1  விவிபேட், மொடக்குறிச்சி தொகுதியில் 2  பேலட் யூனிட், 1 கன்ட்ரோல் யூனிட், 1 விபேட்,  தாராபுரம் தொகுதியில் 3 விவிபேட், காங்க யம் தொகுதியில் 1 விவிபேட், குமாரபாளை யம் தொகுதியில் 3 விவிபேட் இயந்திரங்கள் பழுதாகி மாற்றப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இரவு 7 மணி  நிலவரப்படி 71.42 சதவிகித வாக்குபதிவு நடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.