திருப்பூர், மே 31- விண்ணப்பித்த அனைவருக் கும் அரசு உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் உடு மலைபேட்டை தாலுகா மாநாடு வலியு றுத்தி உள்ளது. உடுமலை லயன்ஸ் திருமண மண் டபத்தில் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் உடுமலை தாலுகா 4 ஆவது மாநாடு நடைபெற் றது. தாலுகா தலைவர் குருசாமி தலை மையில் நடைபெற்ற இந்த மாநாட்டை மாவட்ட தலைவர் ஜெயபால் துவக்கி வைத்துப் பேசினார். வேலை அறிக் கையை தாலுகா செயலாளர் மாலினி முன்வைத்து பேசினார். தமுஎகச தலை வர் சுதா சுப்பிரமணியம், சிஐடியு நிர்வாகி கள் ஜெகதீசன், கனகராஜ், சசிகலா ஆகியோர் பேசினர். இம்மாநாட்டில் ஊரக வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளத்துடன் வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டரா மருத்துவமனையில் மாற்றுத் திறனாளி என்ற சான்றிதழ் வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவ ருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தாலுகா தலைவராக சரவணன், செய லாளராக மாலினி, பொருளாளராக குருசாமி, துணைத் தலைவர்களாக அழகிரி, பழனிசாமி, துணைச் செயலா ளர்களாக மல்லிகா, விஜயா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் பா.ராஜேஷ் நிறை வுரை ஆற்றினார்.