திருப்பூர், நவ.11- ஊத்துக்குளி தாலுகாவில் வீட்டுமனைப் பட்டா கேட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் 500க்கும் மேற்பட்டோர் திங் களன்று காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஊத்துக்குளி தாலுகாவில் குடியிருக்க சொந்த நிலம் இல்லாத குடும்பங்களுக்கு பல்லாண்டு காலமாக விண்ணப்பித்திருந்தும், இலவச வீட்டுமனை பட்டா வழங் கப்படவில்லை. வீட்டுமனைப் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தியும் கோரிக்கை நிறைவேறாததால், திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத் துக்குளி தாலுகா செயலாளர் கே. சரஸ்வதி தலைமையில் கொடியம் பாளையம் நால் ரோட்டில் இருந்து பேரணியாகச் சென்று ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. இதையடுத்து ஊத்துக்குளி வட் டாட்சியர் முருகேஸ்வரன், காங்கே யம் காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளர் மாயவன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார், எஸ்.சுப்பிரமணி, தாலுகா செயலாளர் கே.சரஸ்வதி ஆகியோருடன் பேச் சுவார்த்தை நடத்தினர். இதில், வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப் பித்துள்ள மக்களுக்கு கிராம வாரி யாக பட்டியலிட்டு வீட்டுமனை வழங்க உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். தற்போது அளிக் கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று உறுதியளித் தனர். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், விவசாய சங்கத் தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, கட்சியின் தாலுகா குழு உறுப்பினர்கள் கை.குழந்தை சாமி, மணியன், காமராஜ், பிரகாஷ், சசிகுமார், பாலமுரளி, லெனின் உட் பட 500க்கும் மேற்பட்ட பொதுமக் களும் கலந்து கொண்டனர்.