உடுமலை, ஜன.20- உடுமலை – மூணாறு சாலையில் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரிவாக்கம் செய்ய வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் எல்லைப்பகுதியான உடுமலை 9/6 தணிக் கைச்சாவடி பகுதியில் இருந்து சின்னாறு வரை உள்ள மலைப் பகுதியின் சாலைகளில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. இது குறுகிய சாலை பகுதியாக உள்ளது. எனவே விரிவாக்கம் செய்ய வேண்டும் எனப் பல முறை கோரிக்கை வைத்தும் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ள னர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, உடுமலை 9/6 தணிக்கைச்சாவடி பகுதியில் இருந்து சின்னாறு வரை சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியில் சொல்லும் சாலை சிறிய சாலையையாக உள்ளது. இதை அகலப்படுத்த வேண் டும். அடிக்கடி காட்டு யானைகள் உணவு தேவைக்காக சாலையை கடந்து செல்லும் போது வாகனங்களைத் திருப்ப முடியாமல் அங்கேயே பயத்துடன் நிற்க வேண்டி உள்ளது என்றார்கள். உடுமலை மூணாறு செல்லும் மிக முக்கிய சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், சாலை விரி வாக்க பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.