தருமபுரி, ஜூலை 22- யானைகளின் வழித்தடத்தை ஆக்கி ரமித்துள்ள கார்ப்ரேட்டுகளை விரட்டா மல், பூர்வகுடி மக்களை வெளியேற்ற யானை வழித்தட அறிவிப்பை அரசு செய்துள்ளதாக தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமிநடராஜன் குற்றம்சாட்டியுள்ளார். பல லட்சம் விவசாயிகளை பாதிக் கும் யானை வழித்தட விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார் பில், தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமிநடராஜன் பேசு கையில், விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல்யானை செல்லும் புதிய வழித்தடங்களை அறி வித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 5 வழித்தடம், பென்னாகரம் வட்டத் தில் 2 வழித்தடம் என அறிவித்துள்ளனர். இதனால் பல இலட்சம் விவசா யிகள் வெளியேற்றப்படுவார்கள், தமி ழ்நாட்டில் 2023 ம் ஆண்டு கணக்கெடுப் பின்படி 2961 யானைகள் உள்ளதாக வும் 22 யானை வழித்தடம் உள்ளதாக அறிவித்தனர். காலம் காலமாக வனத்தில் பல்லுயிர்களுடன் பழங்குடி மக்களும் விவசாயிகளும் வாழ்ந்து வந்தனர். மனிதன் விலங்குகளை தொந்தரவு செய்வதில்லை. விலங்கு களும் மனிதனை தொந்தரவு செய்ய வில்லை. யானை வழித்தடம் என்று சொல்லி அப்பாவி மக்களை வெளி யேற்றும் அரசு, கோவையில் ஜக்கி வாசு தேவ்வின் ஈஷா யோகமையம் வனத்தை அழித்து யானையின் வழித்த டத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதேபோல காருன்யா மையம் வன த்தை அழித்து ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். கார்பரேட்டுகளுக்கு வனத்தை அழிக்க அரசு வழிவகைசெய்கிறது. ஆனால், வனத்தில் பூர்வகுடியாக வாழ்ந்துவரும் மக்களை அரசுவெளி யேற்றுகிறது. வனத்துறையினரால் மான் எண்ணிக்கை குறைத்துள்ளது. வனத்தில் வாழும் பூர்வகுடி மக்களா லும் அவர்கள் வளர்க்கும் கால்நடை களாலும் வனம் வளர்ந்திருக்கி றது. எனவே, யானை வழித்தடம் என்று சொல்லி பூர்வகுடி மக்களையும் விவசா யிகளையும் வனத்தை விட்டு வெளி யேற்ற செங்கொடி இயக்கம் ஒருபோ தும் அனுமதிக்காது. தருமபுரி மாவட்டம் பென்னாரம் வட்டம் ஏமானூர் கிராமத்தில் 1996 ம் ஆண்டு அங்குள்ள 317 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டாவை ஆ- பதிவேட்டில் பதியவேண்டும். இவர்களுக்கு புதிய பட்டா வழங்க வேண்டும். வனவிலங்கு தாக்கி உயிரிழந்தால் உடனடியாக நிவார ணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்கள் வனவிலங்குக ளால் சேதப்படுத்துவதை காப்பீடு திட் டத்தில் இணைத்து பயிர்கள் வனவி லங்குகளால் சேதப்படுத்தினால் நிவா ரணம் வழங்கவேண்டும். பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை தவிர்க்க கேரளா அரசு போன்று விவசாயிகளே சுட அனுமதிக்கவேண் டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், கே.என்.மல்லையன், ஏ.நேரு, எஸ்.தீர்த்தகிரி, டி.ஆர்.சின்ன சாமி, கே.அன்பு, ஆ.ஜீவானந்தம், பி.சக்கரவேல், ஆர்.சக்திவேல், எம். தங்கராஜ், எம்.ராஜா, கே.முனியப்பன், பி.முருகன், பி.மாது, எம்.ராமகிருஷ் ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், தருமபுரி ஒன்றியசெ யலாளர் பி.ரவி, நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, தரும புரி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமா ரிடம் சங்க தலைவர்கள்கோரிக்கை மனுவை வழங்கினர்.
நீலகிரி
இதேபோன்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், வனவிலங்கால் உயிர் இழப்பவர் குடும்பத்தில் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். பாதிக்கபட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மனித விலங்கு மோதலுக்கு விஞ்ஞானி ரீதி யிலான தீர்வை எட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் ராஜன், ரமேஷ், எம்.ஆர்.சுரேஷ் மற் றும் மாதர் சங்க தலைவர் கே.எ சோதா, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் சுதர்சனன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், விவசாய சங்க ஏரியா கமிட்டிச் செயலாளர் கோபி நன்றி கூறினார். சேலம் இதேபோன்று, சேலத்தில், வாழப் பாடி வருவாய் ஆய்வாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விவசாயிகள் சங்க தாலுகா தலை வர் எ. பழனிமுத்து தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில துணைச் செயலாளர் ஆர்.சரவ ணன், மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்டத் தலைவர் அன்பழ கன், துணைத்தலைவர் ஏ.பொன்னு சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.
திருப்பூர்
உடுமலைப்பேட்டை மத்திய பேருந்துநிலையம் எதிரில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார் பில் திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, உடுமலை ஒன்றிய தலை வர் ஏ.ராஜகோபால் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டப் பொருளாளர் அ.பால தண்டபாணி, துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம்.வீரப் பன் ஆகியோர் உரையாற்றினர், இப்போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வை.பழனிசாமி, திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி, மடத்துக்குளம் தாலுகா தலைவர் வி.ராஜரத்தினம் மாவட்டக் குழு உறுப்பினர் மணிகண் டன் உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் த.அருண் பிரகாஷ் நன்றி கூறினார்.
கோவை
கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி. இளங் கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.ஆர். பழனிச்சாமி முன் னிலை வகித்தார். மாவட்டக் குழு நிர்வா கிகள் காளப்பன், தங்கவேல், சங்கரன், ரவீந்திரன், ஸ்டாலின் பழனிச்சாமி, ஆறுச்சாமி, கருப்பையா, ராஜா, மணியன், ஆறுச்சாமி, சபரீஸ்வரன், சிவக்குமார், சுப்பிரமணியம், சுகுமார், சரண்யா உள்ளிட்ட ஏராளமான விவ சாயிகள் பங்கேற்றனர்.
ஈரோடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்களன்று கோபி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலை வர் சி.பெருமாள், மாவட்டச் செய லாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் உரையாற்றினர். இதில், சங்க நிர்வாகிகள், குப்பு சாமி, கே.எம்.விஜயகுமார், பி.சடை யப்பன், பெரியசாமி, சிபிஎம் நகரச் செய லாளர் துரைசாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், சங்கத் தின் பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனு வினை அளித்தனர்.