திருவண்ணாமலை, டிச.6- திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கு ஆரணி, வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 6 அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வட்டாரக் கல்வி அலுவல கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டணி நிர்வாகிகள் எஸ்.டேவிட்ரா சன், சி.அ.முருகன் மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகி கள் பலர் கலந்து கொண்ட னர். தமிழக அரசு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு அறி வித்துள்ள பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2019 ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.