districts

img

ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பு மாநில அளவில் எலத்தூர் குளம் முதலிடம்

கோபி, மார்ச் 17- நடப்பு ஆண்டுக்கான (2024) ஊர்புறப் பறவைகள் கணக் கெடுப்பில் ஈரோடு மாவட்டம், நம்பியூரில் உள்ள எலத்தூர்  குளம் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் பறவைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில்,  உலகம் முழுவதும் பலர், தங்கள் பகுதியில் உள்ள பறவை களை ஆவணப்படுத்தி, மக்கள் அறிவியல் தளமான ebird-ல்  பதிவேற்றம் செய்து வருகின்றனர். இக்கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு பறவை இனங்களின் எண்ணிக்கையில் ஏற்படும்  மாற்றங்கள், பாதிப்புகள் போன்றவற்றை கண்டறிந்து அவற் றைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த நிலையில்,  நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணிகள் கடந்த 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை  நடைபெற்றது. இந்த ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப் பில், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத் தூர் பெரியகுளத்தில் 118 ஊர்புறப் பறவை இனங்கள்  வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டு, உள்ளூர் மக்கள் மற்றும் பறவை ஆர்வலர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பில், அதிக பறவை இனங்கள் வசிக்கும் வாழ்வி டமாக எலத்தூர் குளம் மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 26வது இடத்தையும் பெற்றுள்ளது. எலத்தூர் பெரியகுளத்தில் இதுவரை 168 வகை யான பறவை இனங்கள் வசிப்பதாக ஆவணப்படுத் தப்பட்டுள்ளது. இதில், 49 இனங்கள் வலசை வந்துள்ள வெளிநாட்டு பறவை இனங்கள் ஆகும். இங்கு கருநாரை, மர நெட்டக் காலி, மஞ்சள் வயிறு கதிர்க்குருவி போன்ற அரி தான வலசை பறவைகளும், வரித்தலை வாத்து, வெண்பு ருவ வாத்து, தட்டைவாயன், ஊசி வால் வாத்து, கிளுவை  போன்ற வலசை வரும் வாத்துகளும், விரால் அடிப்பான், வெண்தோள் கழுகு உள்ளிட்ட வலசை வரும் இரை கொல்லி பறவைகளும், இந்த எலத்தூர் குளத்தை வாழ்விட மாக கொண்டுள்ளன. மேலும், அழிவின் விளிம்பில் உள்ள ஆற்று ஆலா, பெரிய  புள்ளிக்கழுகு, வெண்கழுத்து நாரை, செந்தலை வல் லூறு, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, வெள்ளை அன் றில் போன்ற உள்ளூர் பறவைகளும் இக்குளத்தில் காணப்ப டுகின்றன. இரவு நேரத்தில் இங்குள்ள மரங்களில் 3,000க் கும் மேற்பட்ட கொக்கு, நாரை, நீர்காகம், பாம் புதாரா, கா கம், புறா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் நீர்வாழ் பறவை களும்  தங்கி வாழ்ந்து வருகின்றன. எனவே, தமிழ்நாடு அளவில் அதிக பறவை உள்ளூர் மற்றும் வலசைப் பறவை இனங்களின் வாழ்விடமான எலத் தூர் குளம் பல்லுயிர் செறிவு மிக்க இடமாகும். இந்த எலத்தூர்  பெரிய குளத்தை பாதுகாக்கப்பட்ட ஈரநில பகுதியாக அறி விக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவ் வாறு அறிவிப்பதன் மூலமாக, இங்குள்ள அரியவகை பறவை  இனங்களும், இக்குளத்தை ஆதாரமாகக் கொண்டுள்ள,  இதர உள்ளூர் பறவை இனங்களும் பாதுகாக்கப்படுவதுடன், இப்பகுதி சுற்றுவட்டார மக்களுக்கும் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் என சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர்.