சேலம், செப்.28- சேலம் சோனா கல்லூரியில் அக்.15 ஆம் தேதியன்று மாபெரும் கல்விக்கடன் முகாம், மாவட்ட நிர் வாகத்தால் நடைபெற உள்ளதாக ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித் துள்ளார். சேலம் அரசு சட்டக்கல்லூரி கூட்ட ரங்கில் கல்விக்கடன் தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடனான ஒருங்கிணைப் புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசுகையில், எந்தவொரு மாணவ ருக்கும் கல்வி கற்பதற்கு பொருளா தாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே கல்விக் கடன்கள் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 153 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போன்று மாவட்டத்தில் 47 வங்கிகள் மற்றும் இதன் 501 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தால் அக்.15 ஆம் தேதி யன்று சோனா தொழில்நுட்பக் கல் லூரியில் மாபெரும் கல்விக்கடன் மேளா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் லூரி முதல்வர்களும், கல்விக்கடன் பெற விருப்பமுள்ள அனைத்து மாண வர்களும் பங்கேற்க செய்திட அறிவு றுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இக் கூட்டத்தில் வங்கிகள் கல்விக்கடன் விண்ணப்பங்களின் மீது குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் கடன் வழங்க ேண்டுமெனவும், உரிய காரணங்கள் இன்றி கல்வி கடன் விண்ணப்பங் களை நிராகரிக்கக்கூடாது என வங்கி யாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது, என்றார். இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை முது நிலை கடன் ஆலோசகர் வனங்கா முடி, இந்தியன் வங்கி மண்டல மேலா ளர் ராஜ்குமார், பாரத ஸ்டேட் வங்கி யின் மண்டல மேலாளர் சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் துர்கா லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.