districts

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

கோவை, செப்.4- கனமழையின் காரண மாக தக்காளி விளைச்சல்  பாதிக்கப்பட்டு, மார்க்கெட் டிற்கு வரத்து குறைந்துள்ள தால், விலை அதிகரித்துள் ளது. கோவை - மேட்டுப்பா ளையம் சாலை, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் டிற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங் களிலிருந்து காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செங்ய யப்படுகிறது. தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது. கர்நாட காவில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படு கிறது. பருவமழைக்கு முன்பு தினமும் கர்நாடகாவில் இருந்து 20க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளிகள் கொண்டு வரப் படும். மழையால் 10 வண்டிகள் மட்டுமே வருகிறது. அதில் 5 வண்டிகள் கேரளாவிற்கு சென்று விடுகிறது. இதனால் மாவட்டத்தில் ஒரு கிலோ ரூ.10க்கு விற்கப்பட்ட தக்காளி தற் போது விலை உயர்ந்து காணப்படுகிறது. எம்ஜிஆர் மார்க் கெட்டில் கிலோ ரூ.30க்கு விற்பனையாகி வருகிறது. டிகே மார்க்கெட்டுக்கு பூலுவப்பட்டி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட கோவை மாநகர் பகுதிகளி லிருந்து தக்காளிகள் விற்பனைக்கு வரும். தற்போது மழை  காரணமாக வரத்து குறைந்ததால், பூலுவப்பட்டி, கிணத்துக் கடவு பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளி வருகிறது. இங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது. இனி வரும் நாட்களில் இன்னும் விலை உயர வாய்ப்புள்ள தாக தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

;