districts

img

சிபிஎம் பாலக்கோடு வட்ட செயலாளராக டி.எஸ்.ராமச்சந்திரன் தேர்வு

தருமபுரி, செப்.25- மார்க்சிஸ்ட் கட்சியின் பாலக்கோடு வட்ட செய லாளராக டி.எஸ்.ராமச் சந்திரன் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாலக் கோடு வட்ட சிறப்பு பேரவை கூட்டம் பாலக் கோட்டில் வட்டக்குழு உறுப்பினர் பி.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், வட்ட செயலாளர் பி.கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். நீண்ட கால மாக அனுபவம் செய்து  வரும் விவசாய நிலங்க ளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். பாலக் கோடு வட்ட தலைமை மருத்துவமனையில் மருத் துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். வீடற்ற ஏழைகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிவைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் பாலக்கோடு வட்ட செயலாளராக டி.எஸ்.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். வட்டக்குழு உறுப்பினர் சி.ராஜா நன்றி கூறினார்.

;