districts

img

கொலை செய்ய முயற்சிக்கும் போதை இளைஞர்கள் - கோவையில் பரபரப்பு

கோவை, மே 14- கஞ்சா விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தமைக்காக, புகார் கொடுத்த குடும்பத்தை பழி வாங்கும் நோக்கத்தில், இளைஞர்கள் சிலர் ஆயுதங்களுடன் சுற்றி  வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதி எஸ்.ஐ. எச்.எஸ் காலனியில் வசித்து வருபவர்கள் வீரலட்சுமி. வீரலட்சுமிக்கு இரண்டு மகன்கள்  உள்ளனர். இவரது வீட்டின் அருகில் இளை ஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அப்ப குதியில் நடமாட முடியாத சூழல் நிலவுவ தாகவும், சில நேரங்களில் அங்கு வருபவர்க ளிடம் இளைஞர்கள் பணம் கேட்டு வழிப்பறி யில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் வீரலட்சுமியின் மகன் களை சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் வழிம றைத்து பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்ட தாகவும், அப்போது தாக்குதல் நடத்தியதா கவும் தெரிகிறது. இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரலட்சுமி புகார் அளித்திருந்தார். இதனால்  ஆத்திரம் அடைந்த கஞ்சா விற்பனை செய்யும் அந்த இளைஞர்கள், வீரலட்சுமியை யும் அவரது இரண்டு மகன்களையும் மிரட்டி யுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கு அடிக் கடி வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக  கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர் கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட் சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ள னர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வீரலட்சு மியின் இல்லத்திற்கு ஆயுதங்களுடன் சென்ற  இளைஞர்கள் வீரலட்சுமியின் குடும்பத்தி னரை தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வீரலட் சுமி குடும்பத்தாரும் சுதாரித்து கொண்ட தால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி  சென்றுள்ளனர். எனினும் தொடர்ந்து அக்கும் பல் வீரலட்சுமியின் இல்லத்தை நோட்ட மிட்டு வருகின்றனர். எனவே, அவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்க ளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளர் அலு வலகத்தில் வீரலட்சுமி மனு அளித்துள் ளார். மேலும் அந்த இளைஞர்கள் ஆயுதங் களுடன் வீட்டை நோட்டமிடும் சிசிடிவி காட்சி களையும் வெளியிட்டுள்ளார்.

;