நாமக்கல், ஏப்.25- இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி யில், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் திரு வள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆதிதிரா விடர் நல மாணவர் விடுதியில், நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒரு மணி நேரத் திற்கு 250 லிட்டர் சுத்திகரிக்கும் திறன் மற்றும் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின், செயல்பாட் டினை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் செவ்வாயன்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல் வர் சி.பானுமதி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.