உடுமலை, நவ.25- குடிமங்கம் ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் பிரச்சணைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இடதுசாரி இயக்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண் டாட்டம் மற்றும் கல்வெட்டு திறப்பு மற்றும் பொதுக்கூட் டம் சனியன்று குடிமங்கலம் ஒன்றியம் அணிகடவு – இராம சந்திராபுரம் பகத்சிங் திடலில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றி யக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார், பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். விஜயகுமார் வரவேற்றார். இதில், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் பங்கேற்று சிறப்புரை யாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், ஒன்றியச் செயலாளர் சசிகலா, சிஐடியு போக்குவரத்து சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன், விவசாய சங்கத்தின் தலைவர் ராஜரத்தினம், கட்சியின் ஒன் றியக்குழு உறுப்பினர் ரங்கநாதன் ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் நலன் காக்கும் வகையில் கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். நல்லாறு அணை திட்டத்தை உடனடியாக கட்ட வேண்டும். குடிமங்கலம் ஒன் றியத்தில் குடிநீர் பிரச்சனை மற்றும் சுகாதாரக் கேடு ஏற் படுத்தும் தாய் கோழிப் பண்ணைகளை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டது. முடிவில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் கே. செந்தில் குமார் நன்றி கூறினார்.