districts

செப்.17 மதுபான கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருப்பூர், செப்.14- நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும்  செவ்வாயன்று (செப்.17) மதுபான கடைகள் கூடங்கள் மன மகிழ் மன்றங்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்படாது. இதை  மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் வரும் செப்.17ஆம் தேதி (செவ்வாயன்று) நபி கள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில  வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபான கடைகள்,  மதுபான கூடங்கள், மனமகில் மன்றங்கள், உணவு விடுதிக ளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மது பான கூடங்கள் ஆகியவை மூடப்பட்டு மதுபானங்கள் விற் பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டு மென அரசு  உத்தரவிட்டுள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் செவ்வா யன்று அனைத்து மதுபான கடைகள், மதுபான கூடங்கள், மன மகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து  செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை செயல்படாது. இதை மீறும் பட்சத்தில் தொடர் புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் தக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.