சேலம், மார்ச் 20- வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில், நடமாடும் வாகனத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் சேலம் மாவட்டம் முழுவதும் வீடியோ வாகனத்தால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தா தேவி, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத் தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் வாக்களிக்கும் வகையி லும், குறிப்பாக, இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்க ளிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் தயார் செய்யப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு நாளினை குறிப் பிட்ட ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறதென ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.