நாமக்கல், செப்.1- மழை நீருடன் சாயக்கழிவு நீரை வெளியேற்றி வருவதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட வாய்ப்புள்ள தாக பொதுமக்கள் தெரிவித்துள் ளனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் மற்றும் பள்ளி பாளையம் பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட சாய ஆலை கள் இயங்கி வருகின்றன. இந் நிலையில், சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப் படாமல் கழிவு நீர் வெளியேற்றப் படுவதாக புகார்கள் வருவதை ஒட்டி, அடிக்கடி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை மேற் கொண்டு வருகின்றனர். அவ் வப்போது ஒரு சில சாயப்பட்ட றைகளுக்கு சீல் வைப்பது மற்றும் அபராதத் தொகை விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனாலும், சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க முடியாத நிலையே உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா, பள்ளி பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, சுத்திக ரிப்பு செய்யப்படாமல் கழிவு நீர் வெளியேற்றினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என எச் சரித்து சென்றார். இந்நிலையில், சாய ஆலைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் சாயக் கழிவு நீரை தேக்கி வைத்து, திறந்து விட்டு வருகின்றனர். இத னால் காவிரி ஆற்று நீர் மாசு ஏற்படு கிறது. காவிரி ஆற்றை பயன் படுத்தும் பொதுமக்களுக்கு தோல் நோய், அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு விதமான தொற்று நோய்கள் ஏற் படுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சாய ஆலை களில் பகல் நேரங்களில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, தாங்கள் சுத்திகரித்துத்தான் சாயக் கழிவு நீரை வெளியேற்றி வருவ தாக தோற்றத்தை மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகளிடம் சாய ஆலை உரிமையாளர்கள் ஏற் படுத்துகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் தொடர்ந்து சாயக்கழிவு நீரை வெளி யேற்றி வருவது பொதுமக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக குமார பாளையம், பள்ளிபாளையம் பகுதி களில் தொடர்ந்து இரவு நேரங் களில், மழை பெய்து வருவதால், சாய ஆலைகள் தங்கள் சாயக் கழிவுநீரை தேக்கி வைத்து இரவு நேரங்களில் சாக்கடை கால்வாய் மூலம் காவிரி ஆற்றில் கலந்து விடு கின்றது. இதனால் காவிரி ஆறு மாசு படுவதுடன் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள் ளனர். இது குறித்து உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள், இது போன்று செயல்படும் ஆலைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதன் உரிமையாளர் களின் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின் றனர்.