தருமபுரி, டிச.20- மூத்த குடிமக்கள் முகாம் நடத்தி உதவி உபகரணங் கள் வழங்கக்கோரி தரும புரி நாடாளுமன்ற உறுப்பி னர் செந்தில்குமார் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளார். இதுதொடர்பாக தரும புரி நாடாளுமன்ற உறுப்பி னர் செந்தில்குமார், ஒன்றிய சமூக நீதி மற்றம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீரேந்திரகுமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக் குட்பட்ட மேட்டூர் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு ஏடிஐபி முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும். தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூர் உள்ளடக்கிய 6 சட்டபே ரவை தொகுதிகளிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மூத்த குடிமக்களுக்கான முகாம் நடத்தி உதவி உபகரணங் கள் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை நியமிக்க வேண்டும். மேலும், முகாம்களை நடத்த தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவ பயிற்சியாளர் என்ற முறையில் வழங்குகிறேன் என்றும், எனவே, இம்முகாம் நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.