districts

img

குடிநீர் இணைப்புக்கு வைப்புத் தொகை மாதர் சங்கத்தினர் போராட்டம்

சேலம், செப்.14- ஜல் ஜீவன் திட்டத்தில், குடிநீர் இணைப் புக்கு வைப்புத் தொகை செலுத்தும் நடை முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில், தொடர்ந்து வேலை வழங்க வழங்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் ரூ.1,600 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. இந்த நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நங்கவள்ளி வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் எம். கார்த்திகா தேவி தலைமை வகித்தார். இதில்,  மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி, ஒன்றிய செயலாளர் ஜி.கவிதா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;