districts

img

கோவையில் திணை இயற்கை உணவு திருவிழா

கோவை, ஏப்.5- கொங்கு மண்டல திணை இயற்கை வேளாண் உணவு திரு விழா கோவையில் நடைபெற உள்ளதாக தி ரைஸ் எழுமின் அமைப்பினர் தெரிவித்தனர். கோவையில், ரைஸ் எழுமின்  அமைப்பும் நண்பன் அறக்கட்ட ளையும், அன்னை பூமிக்கான அன்னையர்கள் அமைப்பினர், கோவை பத்திரிக்கையாளர் மன் றத்தில் செய்தியாளர்களை சந்தித் தனர். இதில், ஜெகத் கஸ்பர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏப்ரல் 14 மற்றும் 16 தேதிகளில், 15  ஈரோடு- சித்தோட்டில் பசுமை சங்க மம் நிகழ்வு நடைபெற உள்ள தாகவும், கோவையில் 14ஆம் தேதி  நிர்மலா கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு 200க்கும் மேலான  திணை உணவுகள் காட்சிப்படுத் துதல்  மற்றும்  300க்கும் மேலான  நாட்டு விதைகள் காட்சிப்படுத் துதல் மற்றும் விற்பனை அரங்கு கள்,  மூலிகை சார்ந்த பொருளா தாரத்தை அமல்படுத்துதல் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும், புதிய முயற்சியாக 500  வகையான சிறு தானிய இட்லி கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், கும்மி பாட்டு போட்டியும்,  கோலப்போட்டியும் நடைபெற உள்ளது. கொங்கு மண்டலத்தின், பெண் வேளாண்  வெற்றித் தொழில் முனைவோரை விருது வழங்கி சிறப்பிக்க உள் ளோம். நிகழ்வின்,  சிறப்பு விருந்தின ராக தமிழ்நாடு மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங் கேற்கிறார். ஏப்ரல் 16ஆம் தேதி யன்று காலை வஉசி மைதா னத்தில் கொங்கு பசுமை சங்கமம்  நிகழ்ச்சியினை மக்களுக்கு தெரி விக்கின்ற வகையில், திணை  உணவு விழிப்புணர்வு மாரத்தான்  ஓட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் உயிரின் சுவாசம் என்ற அறக்கட்டளையும்  இணைந்து நடத்துகின்றன. இந்நிகழ்வில்  மரக்கன்றுகள்,  விதை பைகள் பரிசாக வழங்க உள்ள தாக தெரிவித்தார்.