நாங்குநேரி சாதிவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்டக்குழு உறுப்பினர் கே.ரவி தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் மூத்த தோழர் பட்டீஸ்வரமூர்த்தி, நகரச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, சிபிஐ சண்முகம், வாலிபர் சங்க செயலாளர் மணியாழன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் நிசார் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.