பேரூராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தும் அரசாணை 139 ஐ கைவிடக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சங்கம் சார்பில் தாராபுரம், அண்ணாசிலை முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகி என்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.