உடுமலை, ஜூலை 27- மணிப்பூர் மாநிலத்தில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி, பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து புதன்கிழமை மடத்துக்குளம் தாலூக்கா நரசிங்காபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளை செயலாளர் கருப்புசாமி தலைமை ஏற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வி.வடிவேல், பொறுப்பு செயலாளர் எம்.எம்.வீரப்பன், தாலூகாக்குழு உறுப்பினர் ராஜரத்தினம், பன்னீர்செல்வம் மற்றும் ராதா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.