சேலம், டிச.30- கிராம உதவியாளர்களுக்கும் சத வீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.7000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் மேட்டூரில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியா ளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித் தார். வட்டத் தலைவர் சஸ்வரி முன் னிலை வகித்தார். மேலும் சிங்கராயன், செந்தில்குமார், பெருமாயி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கும், அலு வலக உதவியாளர்களுக்கு இணை யான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கு வது போல் கிராம உதவியாளர்க ளுக்கும் சதவீத அடிப்படையில் குறைந் தபட்சம் ரூ. 7000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். அரசாணை 33-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு, கருணை பணி நியமனம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி கிராம உத வியாளர்களுக்கு தொடர்ந்து மாற்றுத் திறனாளி ஊர்த்திப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.