உதகை, செப்.20- தேயிலை தோட்ட தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டத் தொழிலாளர் சங்கத் தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, தாய் சோலை, தேவர் சோலை, நாடு காணி ஆகிய பகுதிகளில் தாய்சாலை பிளான்டேசன் பிரை வேட் லிமிடெட்டிற்கு தேயிலை தோட்டங் கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங் களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்துறையிடம் பலமுறை முறை யிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்வழங்க வேண்டிய ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை. மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை பல ஆண்டுகளாகி யும் வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம்தலையிட்டு தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியம் மற்றும் பணிக்கொடையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரி வித்துள்ளனர். முன்னதாக, இந்த மனு அளிக்கும் இயக் கத்தில் சிஐடியு தோட்ட சங்க செயலாளர் எம்.ஆர்.சுரேஷ் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.