திருப்பூர், டிச. 18- அனைத்து இபிஎப்ஓ தொழிலா ளர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இபிஎப்ஓ 95 திருப்பூர் மாவட்டம் ஓய் வூதியர்கள் சங்கம் கோரிககை விடுத் துள்ளனர். திருப்பூர் ஜீவாகாலனி மில் தொழி லாளர் சங்க திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஓய்வூதியர் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் திருப்பூர் பகுதியில் உள்ள ஆஷர் மில், டிடிபி மில், கோபால்டு மில், தனலட்சுமி மில் காட்டன் மில், வெங்கடலட்சுமி மில், உஷா மில், போன்ற மில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், மற்றும் தனி யார் துறை தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டுக்கு வி.கோபால் தலைமை ஏற்றார். கூட்டத்தின் நோக் கம் குறித்து சி.ஈஸ்வரமூர்த்தி அறி முக உரையாற்றினார். எம்.தேவராஜ் வரவேற்றார். மாநாட்டு வாழ்த்துரை யாக எல்.பி.எப்.சங்கத்தின் கே.ராம தாஸ், ஹெச்.எம்.எஸ் சங்கத்தின் எ. ஜோசப், ஏ.டி.பி.சங்கத்தின் எம்.தேவ ராஜ் ஏஐடியுசி சங்கத்தின் பி.ஆர். நட ராஜன், சிஐடியு சங்கத்தின் ஆர்.ஈஸ் வரன் எம்எல்எப் சங்கத்தின் மு.சம்பத் ஆகியோர் வாழ்த்திப் பேசினார் அகில இந்திய பென்சனர் கூட்டமைப் பின் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ. ஆர்.துரைசாமி, மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.செல்வராஜ், கோவை மாவட்டத் தலைவர் ஆர்.நாகராஜ் முன் னாள் தலைவர் கே.புஷ்பராஜ் மற் றும் குமாரசாமி ஆகியோர் பேசி னர். ஒன்றிய அரசு கடந்த பல ஆண்டுக ளாக பி.எப் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.9000 கொடுக்காமல் தொடர்ந்து இழுத் தடித்து வருகிற போக்கை கண்டித் தும், உடனடியாக ஒன்றிய அரசு பென் சன் பெரும் அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்ச பென்ச னாக ரூபாய் 9 ஆயிரம் வழங்க வேண் டும் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதியோர்க ளுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமல் படுத்த வேண்டும், பஞ்சபடியுடன் இணைத்து பென்சன் வழங்க வேண் டும், வருங்கால வைப்பு நிதித் தொகையை பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யக்கூடாது, மூத்த குடி மக்களுக்கு பறிக்கப்பட்ட இலவச ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு: இம்மாநாட்டில் இ.பி.எஃப் 95 திருப்பூர் ஓய்வூதியர்கள் நலச்சங்கத் திற்கு 25 பேர் கொண்ட திருப்பூர் மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. தலைவர் சி.ஈஸ்வரமூர்த்தி, துனைத்தலைவர்கள் கே.நடராஜன், ஏ.ஜோசப், செயலாளர்: வி.கோபால், துணைச்செயலாளர் எஸ்.கருப்பு சாமி, பொருளாளர்: எம்.தேவராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்ட னர். இம்மாநாட்டில் ராஜேந்திரன் நன்றி கூறினார்.