திருப்பூர், ஜூன் 23– திருப்பூர் வருவாய் கோட்டத் துக்கு உட்பட்ட அவிநாசி, பொங்க லூர், ஊத்துக்குளி வட்டாரத்தில் மான்கள் எண்ணிக்கை பெருகியுள் ளது. இந்த மான்களால் விவசாயப் பயிர்கள் சேதமடைகின்றன. எனவே மான்கள் பெருக்கத்தை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இத னால் விவசாயிகளுக்கு ஏற்பட் டுள்ள பாதிப்புகளுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார். திருப்பூர் வருவாய் கோட்டாட்சி யர் தலைமையில் விவசாய குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் கலந்து கொண்டு விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஊத்துக்குளி வட்டத்தில் புஞ்சை தளவாய்பாளையம், வடு கபாளையம், காவுத்தம்பாளையம், பல்லவராயன்பாளையம் கிரா மங்களில் வெறிநாய் கடியால் ஆடு கள், கன்றுகள் உயிரிழப்புகள் ஏராள மாக ஏற்படுகிறது. இதனால் விவசா யிகளுக்கு பெரிய அளவில் பொரு ளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த வெறிநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.
ஊத்துக்குளி, அவிநாசி, பொங் கலூர் ஒன்றியங்களில் மான்கள் இனப்பெருக்கம் அதிகரித்து, கூட் டங்கூட்டமாக வந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறை நடவ டிக்கை எடுத்து விவசாயத்தை அழிக்கும் மான்களை அப்புறத்தி வனப்பகுதியில் விடவும், வனத் தில் இருந்து வெளியேறாமல் இருக் கவும் நடவடிக்கை எடுக்க வேண் டும். தொடக்க பால் உற்பத்தியா ளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வாரந்தோறும் கால்நடை மருத்து வர்கள் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப் படுத்த வேண்டும்.
இழப்பீட்டில் வெளிப்படைத்தன்மை
அரசூர் - ஈங்கூர் 440 கிலோவாட் உயர் மின் கோபுர திட்டத்தால் அவி நாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக் குளி வட்டத்தைச் சேர்ந்த ஏராள மான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாடு மின் தொடர மைப்பு கழக அதிகாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளை தற் போது துவக்கி வருகின்றனர். பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத் திற்கான இழப்பீடு ஏதும் வழங்கா மல், ஒவ்வொரு விவசாயிகளையும் மின்வாரிய அதிகாரிகள் சந்தித்து உங்களுக்கு இவ்வளவு இழப்பீடு என குறிப்பிட்ட ஒரு தொகையை பொத்தம் பொதுவாக கூறி வருகின் றனர். ஆகவே ஒவ்வொரு விவசாயி களுக்கும், நிலம் மற்றும் இதர இழப் பீடு குறித்து குறிப்பிட்டு தனித்தனி பட்டியல் வழங்கவும், இதில் வெளிப் படை தன்மை இருக்கவும் வரு வாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிய பின்பே பணிகள் மேற்கொள்ள வேண்டும். இழப்பீடு தொகை தற்போதைய சந்தை மதிப்பில், அந்த கிராமத் தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு நிர்ணயித்து வழங்க வேண்டும் என ஆர்.குமார் கூறினார்.