நாமக்கல், மே 21- காப்பீட்டு சேவையில் குறை பாடு மற்றும் சேவை குறைபாடு ஆகி யவற்றிற்காக, ரூ.2 லட்சம் வாடிக்கை யாளருக்கு இழப்பீடாக வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே உள்ள சின்னமநா யக்கன் பாளையத்தில் வசித்து வரு பவர் கௌரி குமார் (37). இவர் இரு சக்கர வாகனத்தை (SUZUKI Gixxer SF 155) கோயம்புத்தூரில் உள்ள என். ஜே. பைக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற விநியோகஸ்தரிடம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்தை செலுத்தி கடந்த 2021 மார்ச் இறுதி நாளில் வாங் கியுள்ளார். இவ்வாகனம் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்து விநியோகஸ்தர் வாக னத்தை விற்பனை செய்துள்ளார். பின்பு இருசக்கர வாகனம் பதிவு செய்யப்பட்ட பின்னர் பதிவு புத்த கத்தை பார்த்த போது அந்த வாகனம் 2020 ஆம் ஆண்டில் உற்பத்தி செய் யப்பட்ட வாகனம் என்று கௌரி குமா ருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இன்சூரன்ஸ் வழங்கிய நிறுவனம் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனம் என்று பாலிசி யில் குறிப்பிட்டுள்ளது. அவர் செலுத் திய பணத்திற்கு உரிய ரசீதையும் உட னடியாக விநியோகஸ்தர் வழங்க வில்லை. பின்பு இருசக்கர வாக னத்தை வாங்கிய சில நாட்களில் அதிக சத்தம் ஏற்பட்டதால். சர்வீஸ் சென்டருக்கு சென்று வாகனத்தை சர்வீஸ் செய்து பெற்ற போது வேறு நபர் பெயரில் ரசீது வழங்கப்பட்டுள் ளது. இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து அடிக்கடி சத்தம் வருவ தும் அதனை சர்வீஸ் சென்டரில் சென்று சரி செய்வதுமாக கௌரி குமார் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து உற்பத்தியில் குறைபாடு உள்ள இருசக்கர வாக னத்தை தயாரித்த நிறுவனமும் விற் பனை செய்த விநியோகஸ்தரும் செலுத்திய பணத்தை திரும்ப வழங் கவும் சேவை குறைபாட்டிற்காக உற் பத்தியாளர், விற்பனையாளர், இன் சூரன்ஸ் நிறுவனம் ஆகியோர் இழப் பீடு வழங்கவும் கோயம்புத்தூர் நுகர் வோர் நீதிமன்றத்தில் கௌரி குமார் கடந்த 2022 நவம்பர் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விசாரணைக்காக கோயம்புத்தூரில் இருந்து கடந்த பிப் ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட் டது. பின்பு இதனை விசாரித்த நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி வீ. ராமராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் வழங்கிய தீர்ப் பில் 2021 ஆம் ஆண்டில் மூன்றாவது மாதத்தில் வாகனத்தை வாங்கியவ ருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம் பர் மாதத்தில் உற்பத்தியான வாக னத்தை 2021 ஆம் ஆண்டில் உற்பத் தியானதாக கூறி, விநியோகஸ்தர் விற்பனை செய்துள்ளதும் வேறொரு நபர் முன்பதிவு செய்த வாக னத்தை மாற்றி வழக்கு தாக்கல் செய் தவருக்கு விற்பனை செய்ததும், இன் சூரன்ஸ் பாலிசியில் முறை கேடு செய்ததும் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடை முறை என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. இவ்வழக்கு தாக்கல் செய்த கௌரி குமார்க்கு இரு சக்கர விற்ப னையாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயி ரம் இழப்பீடாகவும், காப்பீட்டு நிறுவ னம் ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டை நான்கு வார காலத்திற்குள் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனம் உற்பத்தி குறை பாடு உடையது என நிரூபிக்கப்ப டாததால் உற்பத்தியாளர் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவி டப்பட்டுள்ளது.