மேட்டுப்பாளையம், மார்ச் 30- கழிவுகளால் மாசடையும் பவானி ஆற்றிலிருந்து குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கும் இடத்தை மாற்ற மேட்டுப்பாளையம் நகர் மன்றத்தின் முதல் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையின் தமி ழகத்திற்குட்பட்ட மேல் பவானி என்னு மிடத்தில் உருவாகி கேரள காடுகள் வழியே பயணித்து கோவை மாவட்டத் தில் உள்ள மலையடிவார பகுதியான மேட்டுப்பாளையம் வழியே மீண்டும் தமிழகத்தினுள் நுழைகிறது பவானி நதி. கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்ட மக்களின் நீர் தேவை யினை பூர்த்தி செய்து வரும் பவானி ஆற்றில் இருந்து 15க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. வனத்தின் வழியே பயணிக்கும் வரை தூய்மை யாய் இருக்கும் பவானி ஆறு, மேட் டுப்பாளையம் நகரப்பகுதியை எட்டும் போது அங்குள்ள தொழிற்சாலை மற் றும் நகராட்சி கழிவுகள் ஆற்றில் கலக்க விடப்படுவதால் மாசடைந்து விடு கிறது. அதேநேரம், மேட்டுப்பாளையம் நகர மக்களுக்கு நகர பகுதியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குடி நீராக விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. நகரப்பகுதியில் மாசடைந்து விடும் ஆற்று நீர் சரிவர சுத்திகரிக்கப் படாமல் குடிநீராக வழங்கப்படுவ தால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்க்கொண்டு வரு கின்றனர். இதனால், ஆற்று நீர் மாசடை யாமல் வரும் விளாமரதூர் என்னுமிடத் தில் இருந்து நீர் எடுக்க வேண்டும். அப் பகுதியில் புதிய நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் நடை பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக பொறு பேற்றுள்ள உறுப்பினர்கள் கொண்ட முதல் மேட்டுப்பாளையம் நகரமன்ற கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல் தீர்மானமாக பவானி ஆற்றின் கரையோர பகுதி யான விளாமரத்தூர் என்னுமிடத்தில் புதிதாக நீரேற்று நிலையம் அமைத்து, அங்கிருந்து தூய்மையான நீரை எடுத்து நகர மக்களுக்கு வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் முடிவு எடுக் கப்பட்டது. இந்த தீர்மானம் ஒரு மன தாக நிறைவேற்றப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட் டது.