districts

img

பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

இளம்பிள்ளை, மார்ச் 29- இளம்பிள்ளை அருகே தனியார் பேருந்துகளில், பள்ளி மாணவர்கள் ஆபத் தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  சேலம் மாவட்டம், இடங் கணசாலை நகராட்சிக்குட் பட்ட காடையாம்பட்டி பகுதி யில் தனியார் பேருந்து ஒன்றின் பின்புற ஏணியில், பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், இளம்பிள்ளையில் இருந்து கே.ஆர்.தோப்பூர் வழித்தடத்தில் 4 தனியார் சிற்றுந் துகள் இயங்கி வருகின்றன. இதில், ஒரு சில நேரங்களில் மட்டும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த வழித் தடங்களில் ஒரே ஒரு அரசுப்பேருந்து மட்டும் இயங்கி வரு கிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பயணம் செய்ய முடியும். இதனால் இளம்பிள்ளை அரசு பெண்கள் மற் றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தனியார் பேருந்துகளில் கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டு இது போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும், இதுகுறித்து தமிழக அரசும், போக்குவரத்து  துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து, இளம்பிள்ளை முதல் கே.ஆர்.தோப்பூர், தாரமங்கலம், ஓமலூர், சேலம்  ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம் அகிய பகுதிகளுக்கு செல்ல இந்த வழித்தடங்களில் கூடுதல் அரசு பேருந்து கள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்களின் பயணம் குறித்து  காவல் துறை நடவடிக்கை எடுத்து மாணவர்களின் உயிரை காக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.