சேலம், ஜன. 18- ஆத்தூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை மேற்௯ரை தூண்களை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி பெளத்த சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் அமைந் துள்ள புத்தர் சிலையின் மேற்௯ரையு டன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலை 1960 ஆம் ஆண்டு வைக்கப்பட்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் எஸ். பி.அன்பு ரோஸ் சிலையை திறந்து வைத் தார். இதனை ஆத்தூர் பகுதியில் உள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பரா மரித்து வருகின்றனர். இந்நிலையில், மர்ம ஆசாமிகள் சிலர் துண்களை சேதப் படுத்தியுள்ளதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மநபர் கள் சிலையை சேதப்படுத்திய போது மேற்கூரை அமைக்கப்பட்டு மற்றும் பீடங்களை சரி செய்யப்பட்டு புதுப்பிக் கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மர்ம நபர்கள் அந்த சிலையின் பீடத்தின் அருகில் அமைந்துள்ள மேற்கூரையை தூண்களை சேதப்படுத்தியுள்ளனர். இதைக் கண்ட ஆத்தூர் பௌத்தர் சங்க பேரவைகளின் பொறுப்பாளர் கள் புத்தர் சிலை முன்பு திரண்டு புத்தர் சிலையின் மேற்கூரையை சேதப்படுத் திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் இந்த புத்தர் சிலையின் முகங்கள் சேதமடைந்து உள்ளதால் புத்தர் சிலையை சீரமைத்து தர கோரிக்கை வைத்தனர்.