தருமபுரி, ஜூலை 8- அருந்ததியர் சமூக மக் கள் மயானத்துக்கு செல்தற் கான சாலை வசதியை ஏற்ப டுத்த வேண்டும் எனகளாப் பாறை மக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், எல்லப்புடை யாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்டது கெளாப்பாறை அருந்ததியர் காலனி. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் இறந்தவர்கள் சடலங் களை வரட்டாறு கரையோரத்தில் அடக் கம் செய்து வருகின்றனர். இம்மக்கள் இது வரை வரட்டாறு அருகேயுள்ள மயானத்துக்கு விவசாயி ஒருவரின் பட்டா நிலத்தின் வழியா கவே சென்று வருகின்றனர்.தற்போது அந்த விவசாயி தனது நிலத்தினை சுற்றிலும் முள் வேலி அமைத்துள்ளார். இதனால், மயானத் துக்கு செல்வதற்கு வழியில்லாமல் அருந்ததி யர் சமூக மக்கள் அவதியுறுகின்றனர். மேலும், அருந்ததியர் சமூக மக்கள் பயன் படுத்தி வந்த பொதுவழிப்பாதையை அப்பகு தியிலுள்ள விவசாயிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, கெளாப்பாறை அருந்ததியர் காலனியில் இருந்து மயானத் துக்கு சென்று வருவதற்கான பாதை வச தியை ஏற்படுத்தவும், பொதுவழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.