தாராபுரம், நவ. 8- தாராபுரத்தில் கனமழை பெய்து தினசரி மார்க்கெட் டில் வெள்ளம் புகுந்தால் காய்கறி வியாபாரிகள் பாதிக்கப் பட்டனர். தாராபுரத்தில் கடந்த 3 நாட்களாக தாராபுரம், காளிபாளை யம், கொளத்துப்பாளையம், அலங்கியம், தளவாய்பட்டி ணம், பொன்னாபுரம், நாரணாபுரம், சங்கராண்டாம்பாளை யம் உள்பட கிராமப் பகுதிகளிலும் பலத்தமழை பெய்து வரு கிறது. கடந்த ஞாயிறன்று தாராபுரம் உடுமலை சாலை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள தாழ்வான பகுதி யில் பெய்த மழை காரணமாக மார்க்கெட்டில் வெள்ளம் புகுந்தது. தண்ணீர் தேங்கிய நிலையில் செவ்வாயன்று பெய்த மழை காரணமாக வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் வெள்ள நீரில் அவதிப்பட்டனர். ஒவ்வொரு முறை யும் மழை வரும் பொழுது இவ்வாறு அவதிப்படுவதாக கூறி வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புகண்ண னுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி தலைவர் உடன டியாக நடவடிக்கை மேற்கொண்டதின் காரணமாக நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வெளியேற்ற தற்காலிக நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து நகராட்சி தலைவர் தெரிவிக்கையில் இப்பகுதி யில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.