districts

img

திருப்பூரில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், ஜூன் 25 - திருப்பூர் மாநகராட்சி சார்பில், இயற்கையை பாதுகாப்போம் மற்றும் சீர் மிகு நகர திட்டம் ஆகிய  நிகழ்வுகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில், சைக்ளத்தான் (சைக்கிள்) விழிப்புணர்வு பேரணி ஞாயிறன்று நடந் தது.  திருப்பூர் மாநகராட்சியின் சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா, எனது குப்பை  - எனது பொறுப்பு, இயற்கையை பாதுகாப் போம் மற்றும் சீர்மிகு நகர திட்டம் ஆகிய நிகழ்வுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்ளத்தான் (சைக்கிள்) விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு, மாநகராட்சி ஆணை யாளர் பவன்குமார் கிரியப்பனவர், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகர  காவல் துணை ஆணையர் உள்ளிட்டோர் சைக்ளத்தான் பேரணியை கொடியசைத்து  துவக்கி வைத்து பங்கேற்றனர்.  திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தி லிருந்து துவங்கிய சைக்கிள் விழிப்புணர்வு பேரணியானது அவிநாசி சாலை, பெருமா நல்லூர் சாலை வழியாக சென்று மீண்டும்  மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவ டைந்தது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் பங் கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டது.