புதுக்கோட்டை, ஜூலை 28- புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உரு வாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டு மென சிஐடியு மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) புதுக்கோட்டை மாவட்ட 11-ஆவது மாநாடு புதுக்கோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன் கொடியேற்றினார். வர வேற்புக்குழுத் தலைவர் அ.மண வாளன் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில துணைத் தலைவர் ஆர்.தெய்வராஜ் உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, பொருளாளர் சி.அடைக்கலசாமி ஆகியோர் அறிக்கைகளை முன்மொழிந்து பேசினர். கிராம பஞ்சாயத்து இணைப்புக் குழு மாநிலத் தலைவர் ப.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநி லப் பொருளாளர் எஸ்.சங்கர், விவ சாயிகள் சங்க மாநில துணைச் செய லாளர் எஸ்.பொன்னுச்சாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாநில செயலாளர் சி.ஜெயபால் நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவராக க.முகமதலிஜின்னா, துணைத் தலைவர்களாக ப. சண்முகம், கு.செல்வராஜ், கே. கலியபெருமாள், எஸ்.ஆறுமுகம், எஸ்.யாசிந்த், செ.பிச்சைமுத்து, செயலாளராக ஏ.ஸ்ரீதர், துணைச் செயலாளர்களாக க.சிவக்குமார், சி.மாரிக்கண்ணு, டி.சந்தானம், திரவியராஜ், தீன், நடராஜன், பொரு ளாளராக எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். மத்திய அரசு காவிரி டெல்லா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. தொழிலாளிகளை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச்சட்டத் திருத் தத்தை ரத்துசெய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை, மாத்தூர் பகுதிகளில் மூடப் பட்ட ஆலைகளை திறந்து தொழி லாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். தையல் கூட்டுறவு சங்கத்தில் நடை பெறும் முறைகேடுகளை களைய வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை யை திரும்பப்பெற வேண்டும். உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.