பெருமாநல்லூரில் சிபிஎம் பயிற்சி முகாம்
திருப்பூர், ஆக. 8 - திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான இடைக்குழு உறுப்பி னர்கள், கல்விக்குழு ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஞாயிறன்று இம்முகாமை கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ் தொடக்கி வைத்தார். தற்கால ஏகாதி பத்தியமும், சோசலிச நாடுகளும் என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர், தீக்கதிர் மதுரை பதிப்பாசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், திராவிட இயக்க வரலாறு நமது பார்வை என்ற தலைப்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், இந்துத்துவா - நாம் எதிர்கொள்ளும் சவால் கள் என்ற தலைப்பில் மாநில கல்விக்குழு உறுப்பினர் அன்வர் உசேன் ஆகியோர் உரையாற்றினர். இதைத் தொடர்ந்து தாய் சி சீன தற்காப்பு கலை அடிப்படை யிலான உடற்பயிற்சி குறித்து தாய் சி பழனி குழுவினர் பயிற்சி அளித்தனர். மக்கள் நலத் திட்டங்களும், நமது பணிகளும் என்ற தலைப்பில் ஈரோடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் அண்ணாதுரை விளக்கினார். இரண்டாம் நாள் அமர்வில் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் குறித்து மாநிலக் கல்விக்குழு உறுப்பினர் சிசுபாலன் பயிற்சி அளித்தார். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப மும் நமது வளர்ச்சியும் என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பி னரும், தீக்கதிர் எண்மப்பதிப்பு ஆசிரியருமான எம்.கண்ணன் உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தை விளக்கி இரண்டு நாள் பயிற்சி முகாமை நிறைவு செய்து வைத்து கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உரையாற்றி னார். இதில் இடைக்குழு உறுப்பினர்கள், கல்விக்குழு ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.
அவுட்சோர்சிங் ஒப்பந்த தொழிலாளர் ஊதியம் ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்த சிஐடியு கோரிக்கை
திருப்பூர், ஆக.8– திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி ஒப்பந்த ஊழியர்க ளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்கு வதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்படி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் கோரியுள்ளது. இது குறித்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள் ளிட்ட நிர்வாகிகள் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்ல டம், திருமுருகன்பூண்டி, வெள்ளகோ வில், காங்கேயம், தாராபுரம், உடுமலை ஆகிய 6 நகராட்சிகளில் வேலை செய் யும் ஒப்பந்தத் ஊழியர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி தூய்மைப்பணியில் அவுட் சோர்சிங் முறை புகுத்தப்பட்டது முதல் அரசாணைப்படி ஊதியம் வழங்க மறுக்கப்படுகிறது. ஒப்பந்த தொழிலா ளர் சட்ட விதிமுறைகள் கடைப்பிடிக் கப்படவில்லை. தூய்மை பணியாளர் களின் வயது வரம்பை 21 முதல் 50 வரை என நிர்ணயம் செய்திருப்பது தொழி லாளர்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான தாகும். இக்காரணங்களால் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்கு நர், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட் டும், ஒப்பந்த நிறுவனங்கள் அரசா ணைப்படி ஊதியம் வழங்காமல், ஊதி யத்தை குறைத்து வழங்கி வருகின்ற னர். நகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்கள் அதிருப்தியுடன் போராட் டத்துக்கு தள்ளப்படும் நிலையில் உள் ளனர். எனவே ஆட்சியர் சிறப்பு கவனம் எடுத்து, நகராட்சி நிர்வாகங்களை அழைத்துப் பேசி ஒப்பந்த ஊழியர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசா ணைப்படி ஒப்பந்த நிறுவனங்கள் ஊதியம் வழங்கவும் சட்ட விதிமுறைப் படி ஒப்பந்த நிறுவனங்கள் செயல்படு வதையும் உறுதி செய்ய வேண்டும். பல்லடம் நகராட்சியில் வேலை வழங் கப்படாமல் உள்ள டிபிசி ஊழியர் களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என கேட்டு கொண் டனர்.
கட்டிடத் தொழிலாளி மகளுக்கு நீதி வழங்க சிஐடியு வலியுறுத்தல்
அவிநாசி, ஆக.8– அவிநாசி அருகே செம்பி யநல்லூர் ஊராட்சி முத்தம் மாள் நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரண்யா(25) வழக்கறிஞர். இருவருக்கும் திருமணமாகி ஒன்பது மாதம் ஆகிறது. கணவருடன் கருத்துவே றுபாடு ஏற்பட்டு பிரிந்து வந்து இரண்டு மாதங்களாக பெற்றோர் வீட்டில் இருந் தார். இந்நிலையில், ஜூலை மாதத்தில் சரண்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் கட்டிட மேஸ் திரியின் மகளும், வழக்கறி ஞருமான சரண்யாவின் மர ணத்திற்கு காரணமான குற்ற வாளிகள் மீது உரிய விசா ரணை நடத்தி கைது செய்ய அவினாசி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலா ளர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. மேலும், அவிநாசி முழு வதும் இதுகுறித்த சுவரொட் டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சாலையை கடந்த குள்ளநரிக் கூட்டம்
ஈரோடு, ஆக.8- சத்தியமங்கலம் வனப்பகுதியில் குள்ளநரிக் கூட்டம் சாலையை கடந்த சென்றதை வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே அடிக்கடி சாலையை கடப்பது வழக்கம். குறிப்பாக யானைகள், மான், காட் டெருமை, சிறுத்தை, கரடி ஆகியவை தண்ணீருக்காக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில், செவ்வாயன்று காலை சுமார் 7 மணியள வில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஒருவர் நடுரோட்டில் குள்ளநரிக் கூட்டம் ஒன்று கடப்பதை பார்த்து அங்கேயே வாக னத்தை நிறுத்தி செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார். அப்போது குள்ளநரிகள் ஒன்றன் பின் ஒன்றாக 8 நரிகள் சாலையை கடந்து சென்றன. இதேபோல் அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும் குள்ள நரி கூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் கணிசமான எண்களில் இருக்கும் குள்ள நரிகளை பார்ப்பது இதுவே முதல்முறை என சுற்றுலா பயணிகள் கூறினர்.
ஈரோடு புத்தகத் திருவிழா அரங்குகளில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடுகள்
ஈரோடு, ஆக.8- ஈரோடு புத்தகத் திருவிழாவில் 5 அரங்கு களில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடுகள் விற்பனை செய்யப்படு கின்றன என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித் தார். தமிழ்நாடு அரசு, மக்கள் சிந்தனை பேர வையுடன் இணைந்து ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 15 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. 19 ஆம் ஆண் டாக நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா வில் 230 அரங்குகள் அமைக்கப்பட்டு தரம் மிக்க நூல்கள் விற்பனை செய்யப்படு கின்றன. புத்தகத் திருவிழாவில், புதிய நூல்கள் வெளியீட்டு நிகழ்வுகளை நடத்த நூல் வெளி யீட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பதிப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அவர் களின் குறைகளை தீர்க்க நடவடிக்கையெடுக் கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கனடா நாட்டில் இருந்து ஏராளமான புதிய புத்தகங்கள் வரு கின்றன. இது உலகத் தமிழர் படைப்பரங் கினால் தான் சாத்தியமாயிற்று. மத்திய அரசு பதிப்பகங்களான நேசனல் புக் டிரஸ்ட், பப்ளிக்கேஷன்ஸ் டிவிசன், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செம்மொழி உயராய்வு மையம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் பல்கலைக் கழகம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ஆகிய வற்றிக்கு 10 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அரிய நூல்கள் விற்பனைக்கு 2 அரங்குகள், பாடநூல் விற்பனைக்கு 3 அரங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அரசால் தடை செய்யப்படாத மதம், சித்தாந்தம் கொண்ட நூல்களை சில அரங்கு களில் விற்பனை செய்யப்பட்டன. வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட சி்லர் திங்க ளன்று வந்து அந்த புத்தகத்தை விற்கவும், அதுதொடர்பான விளம்பர குறிப்பு வைக் கவும் கூடாதென பிரச்சனை செய்தனர். இதனிடையே, அந்த காவல் ஆய்வாளர் துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக் கப்பட்டுள்ளார் என அறிந்தோம். மக்கள் சிந்தனைப் பேரவை சாதி, மதத்திற்கு அப் பாற்பட்டு அறிவார்த்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும் சேவைப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் என்றார்.
மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்திடுக
தருமபுரி, ஆக.8- தருமபுரி அருகே உள்ள பாரமரிப்பின்றி காணப்படும் ஒருங்கிணைந்த மகளிர் சுகா தார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றி யத்திற்குட்பட்ட அமானி மல்லாபுரம் ஊராட்சி யில் உள்ள உப்பாரஅள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் இயங்கும் அங்கன்வாடியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரு கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கு அருகில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளன. இந்த சுகாதார வளாகம் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீரின்றி மூடப் பட்டுள்ளது. இங்கு புதர்மண்டி, சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. மேலும், அங்கன்வாடிக்கு செல்லும் சிமெண்ட் சாலையின் குறுக்கே கற்களை வைத்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அமானிமல்லாபுரம் ஊராட்சி அனைத்து பகுதிகளிலும், கழிவு நீர் கால்வாய், குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைப்பு போன்ற எந்த ஒரு சுகாதார பணிகளும் நடைபெற வில்லை. இதனால், பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளார். இது குறித்து பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்துடன் பலமுறை புகார் தெரிவித் தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, அமானி மல்லாபுரம் ஊராட்சி யில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை களைந்திட மாவட்ட நிர்வாகம் துரித நடவ டிக்கை எடுக்கக் வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மலை ரயிலை மறித்த காட்டு யானை
உதகை, ஆக.8- நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே அடர்ந்த வனப்பகுதியில் மலை ரயில் ஊடுருவிச் செல்வதால், சுற்றுலா பயணிகளை மிகவும் ஆர்வத்துடன் பய ணிப்பர். இந்த வனப்பகுதியில் தற்போது பலா சீசன் துவங்கி உள்ளதால் யானை கூட்டம் சமவெளி பகுதியில் இருந்து படை யெடுத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக மலை ரயில் பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்நிலை யில், செவ்வாயன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன் னூர் வந்த மலை ரயிலை ஒற்றை யானை வழி மறித்து நின் றது. இதனால் மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தண்டவாளத்தில் இருந்து செல் லாமல் நின்றது. யானையை கண்டதும் சுற்றுலா பயணிகள் அச்ச மடைந்தனர். நீண்ட நேரம் கழித்து யானை மலை ரயில் பாதை யில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதனை தொடர்ந்து மலை ரயில் குன்னூர் சென்றடைந்தது.
ஆசை வார்த்தை கூறி பண மோசடி
கோவை, ஆக.8- கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம், ராஜேந்திர பிரசாத் தெருவைச் சேர்ந்தவர் சூரியா (26). மென் பொறியா ளரான இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து செய்து அவர் தனது விவரங்களை பதிவிட்டார். இதனையடுத்து அவர் டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட்டார். அதன் மூலம் சூரியாவை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் தாங்கள் கொடுக் கும் பணிகளை செய்து கொடுத்தால் அதிக லாபம் கிடைக் கும் எனவும், சிறிது முதலீடு செய்தால் போதும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய சூரியா, அவர்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் செய்து கொடுத்தார். அதற்கு அவருக்கு சிறிய தொகை கமிசனாக கிடைத்தது. மேலும், அவரை தொடர்பு கொண்ட அந்த நபர் அதிக முத லீடு செய்தால், நிறைய லாபம் கிடைக்கும், என்றார். இதை நம்பிய சூரியா அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.5.68 லட்சம் அனுப்பினார். ஆனால், அதன் பின்னர் அவருக்கு கமிசன் வரவில்லை. இதன் பிறகு, அந்த நபரை அவர் தொடர்பு கொள்ள முயன்ற போது, சுவிட்ச் ஆப் செய்து விட்டார். மொத்தமாக ரூ.5 லட்சத்து 68 ஆயிரத்தை தராமல் அந்த நபர் மோசடி செய்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து சூரியா கோவை மாந கர குற்றப்புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூர், கோத்தகிரி பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
உதகை, ஆக.8- அரசு போக்குவரத்து கழக உதகை மண்டல அலுவல கத்தில் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுடனான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இதில், கூட லூர், பந்தலூர், குந்தலாடி, பாட்டவயல் வழித்தடத்தில் கூடு தல் பேருந்துகள் இயக்க வேண்டும். பேருந்துகளில் வழித்தட அறிவிப்பு பலகை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும். பேருந்துகள் உரிய அட்டவணை நேரத் தில் குறித்த கால இடைவெளியில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதற்கு பொது மேலாளர் நடராஜன் பதிலளித்து பேசுகையில், தினசரி சராசரியாக 1.86 லட்சம் பயணிகளை ஏற்றி செல்லும் சேவையை உதகை மண்டலம் மேற்கொண்டு வருகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.28 செல வானாலும், வருவாய் ரூ.5 தான் கிடைக்கிறது. பல பகுதி களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க அனுமதி அரசிடம் கேட்டுள்ளோம்; அனுமதி கிடைத்தவுடன் இயக்கபடும். வழித்தட அறிவிப்பு பலகைகள் மக்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படும். பேருந் துகள் உரிய நேரங்களில் இயக்கப்படுவது உறுதி செய்யப் படும். கோத்தகிரி - மேட்டுப்பாளையம், உதகை - கோத்தகிரி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, ஆக.8- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற் பனைக்கு கொண்டு வரு கின்றனர். இதன்படி திங்க ளன்று 1,871 கிலோ பட்டுக் கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்ச மாக ரூ.570க்கும், குறைந்த பட்சமாக ரூ.207க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 28 ஆயிரத்து 7 மதிப் பில் வர்த்தகமானது.