உடுமலை, ஜூன் 24- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெல்லை மாவட்டக் குழு அலுவ லகத்தை தாக்கிய சாதி வெறியர் களை கண்டித்தும் உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியக் குழுக்கள் சார் பில் சனியன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. உடுமலை ஒன்றியம்: உடுமலை தாலுகா பள்ளாபா ளையம் நால்ரோடு பகுதியில் கட்சி யின் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெக தீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் குழு அலுவலகம் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், கள்ளச் சாராய விற்பனையை தடுக்க வேண் டும். உடுமலை ஒன்றியம் முழு வதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள் வேலைத் தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்காமல் திருப்பி அனுப்புவதை கைவிட்டு அனைவ ருக்கும் வேலை வழங்க மாவட்ட நிர் வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். உடு மலை முழுவதும் அதிகாலையிலே சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடப்பதையும், பரவலாக போதைப் பொருட்கள் புழங்குவதை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திப்பட்டது. இதில், உடுமலை ஒன்றியச் செய லாளர் கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலதண்டபாணி, ரங் கராஜ், அருண்பிரகாஷ், குமரகுரு, ராமசாமி, ராஜகோபால், முருக வேல், தமிழ்த்தென்றல், முத்துசாமி, பள்ளபாளையம் கிளைச் செயலா ளர்கள் பி.எஸ்.சுந்தரம், ரத்னகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். குடிமங்கலம் ஒன்றியம்: அதேபோல குடிமங்கலம் ஒன்றி யம் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் கட் சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கலை வாணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலா ளர் என்.சசிகலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கவடிவேலன், தங்கவேல், ரங்கநாதன் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.