districts

img

மே தின கொடி மரத்தை பிடுங்கிய போலீசார்

கோவை, மே 3- இருகூர் பகுதியில் மே தின விழா கொடி மரத்தை அடாவடியாக பிடுங்கி சென்ற  இ1 காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருகூர் பகுதியில், ஒவ்வொரு வருடமும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு, வாலிபர், மாதர், மாணவர் சங்கத்தினர் இணைந்து மே  தின  விழாவை குடும்பம், குடும்பமாய் சிகப்பு  ஆடை அணிந்து எழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இங்கு மே தின விழா என்பது  குடும்ப விழாவாகவே வெளியில் இருந்து  பார்ப்பவர்களுக்கு தோன்றும். இத்தகைய  உழைப்பாளி மக்களின் திருவிழாவை கொண் டாட போலீசாருக்கு ஏதற்கு எரிச்சல் உண்டா கிறதோ தெரியவில்லை. ஒவ்வொரு வருட மும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி இடை யூறு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண் டுள்ளனர். இத்தனைக்கும் நகரப்பகுதியை யொட்டி இருகூர் பகுதி இருந்தாலும், இது பேரூராட்சியாகும். மேதின விழாவிற்கு புதிய  கொடி மரம் நடுவதற்கும் கொடி, தோரணம் கட்டுவதற்கு முறையாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் அனு மதி பெற்றுள்ளனர்.

பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எவ்வித இடையூறு இல் லாமல் கொடி மரம் அமைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், அனைத்தும் தங்களின் சர்வாதிகாரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு இ1 காவல்துறையினர் நட்டப்பட்ட  கொடிமரத்தை பிடுங்கி எடுத்துச்சென்று காவல் நிலையத்திற்குள் எரிந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார், வாலிபர் சங்க செயலாளர் கிருபா கரன், விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி ரவீந் திரன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன் னாள் மாநில தலைவர் பழனிச்சாமி, சிபிஎம் கிளை செயலாளர் கோதண்டராமன் உள் ளிட்டோர் இ1 காவல் நிலையத்திற்கு சென்று  நியாயம் கேட்டுள்ளனர். இதற்கு போலீசார் அலட்சியமாக பதில் அளித்துள்ளதாக தெரி கிறது.  இதனால் அனைவரும் காவல் நிலையத் திற்குள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட் டது. முன்னதாக சிங்காநல்லூர் காவல்துறை யினரின் அடாவடி நடவடிக்கை குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் காவல் உதவி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி, பிடுங்கப்பட்ட கொடிமரத்தை திரும்ப ஒப்ப டைத்து, சமாதானப்படுத்தினார்.