districts

img

ராந்தர் விளக்கேந்தி சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 20 - உடுமலைப்பேட்டை ஒன்றியம் எரிசனம்பட்டியில் தமிழக  அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் ராந்தர் விளக்கேந்தி கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு உறுப்பி னர் சு.தமிழ்த்தென்றல் தலைமையில் எரிசினம்பட்டி கிளைச்  செயலாளர் டி.மணிக்குமார், கொடிங்கியம் ரத்னசாமி முன் னிலையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கட்சியின் உடு மலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக் கமிட்டி  உறுப்பினர்கள் ஏ.ராஜகோபால், எஸ்.ஜெகதீசன், எம்.ரங்க ராஜ், மகேஸ்வரி, வாலிபர் சங்க உடுமலை ஒன்றியத் தலை வர் ஆ.ராமசாமி ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர்  பங்கேற்றனர். நிறைவாக சாலையூர் கிளைச் செயலாளர் என்.கார்த்திக்குமார் நன்றி கூறினார். 

குடிமங்கலம்

குடிமங்கலம் ஒன்றியக் குழுவின் சார்பாக மின்சாரக் கட் டண உயர்வை கண்டித்து பெதப்பம்பட்டி நால்ரோட்டில் கட்சி யின் ராஜகோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப் பாக நடைபெற்றது. விளக்கவுரையாக கமிட்டி உறுப்பினர்கள்  ஆர்.சுந்தர்ராஜ், மோகனசுந்தரம், ஓம்பிரகாஷ், ஆர்.கலை வாணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி ஆறுமுகம்,  ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் சி.ஜெயப் பிரகாசம், கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா ஆகி யோர் உரையாற்றினர். கட்சி அணியினர் திரளாகக் கலந்து  கொண்டனர். 

ஊத்துக்குளி

மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின்  ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் திங்களன்று ஊத்துக்குளி  டவுன் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுக்கா குழு உறுப்பினர் சசிக்கு மார் தலைமை ஏற்றார். கட்சியின் ஊத்துக்குளி டவுன் கிளை  செயலாளர் பெரியசாமி, தாலுக்கா குழு உறுப்பினர்கள் ஆர். மணியன், வி.கே.பழனிசாமி, கை. குழந்தைசாமி, இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுக்கா செயலாளர் கு.பால முரளி, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும் ஊத்துக்குளி பேரூராட்சியின் 7ஆவது வார்டு கவுன்சிலருமான கு.சரஸ் வதி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.தாலுக்கா குழு உறுப் பினர் லெனின் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

திருமுருகன்பூண்டி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி நக ராட்சி கிளைகள் சார்பில் குடிநீர் குழாய் அருகில் இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங் கத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்  கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், திருமுரு கன்பூண்டி நகரமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவரா ஜன், பார்வதி சிவகுமார்  உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
 

 

;